ETV Bharat / state

மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகளுக்கான தனி அறை திறந்துவைப்பு!

author img

By

Published : Oct 6, 2020, 7:12 PM IST

தென்காசி: அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்களின் குழந்தைகள் விளையாட பிரத்யேகமான தனி அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுனா சிங் திறந்துவைத்தார்.

New Children's room
New Children's room

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், சங்கரன்கோவில், தென்காசி ஆகிய மூன்று பகுதிகளிலும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன. மகளிர் காவல் நிலையங்களில் தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, புகார் கொடுக்க வரும் பெற்றோர்களின் குழந்தைகள் விளையாடும் வகையில் தனியறைகள் உருவாக்கப்பட்டுவருகின்றன.

அதன் முதற்கட்டமாக தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வரும் பெற்றோர்களின் குழந்தைகள் விளையாட வசதியாக விளையாட்டு பொருள்கள், படிக்கப் புத்தகம், இருக்கை வசதிகள் அடங்கிய தனி அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் இன்று (அக். 06) திறந்துவைத்தார்.

இதைத் தொடர்ந்து, அந்த அறையை பார்வையிட்ட காவல் கண்காணிப்பாளர், இங்கு உள்ள அனைத்து விளையாட்டுப் பொருள்களையும் காட்சிப்பொருளாக வைக்க வேண்டாம். இவையாவும் குழந்தைகள் விளையாடுவதற்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், சங்கரன்கோவில், தென்காசி ஆகிய மூன்று பகுதிகளிலும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன. மகளிர் காவல் நிலையங்களில் தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, புகார் கொடுக்க வரும் பெற்றோர்களின் குழந்தைகள் விளையாடும் வகையில் தனியறைகள் உருவாக்கப்பட்டுவருகின்றன.

அதன் முதற்கட்டமாக தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வரும் பெற்றோர்களின் குழந்தைகள் விளையாட வசதியாக விளையாட்டு பொருள்கள், படிக்கப் புத்தகம், இருக்கை வசதிகள் அடங்கிய தனி அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் இன்று (அக். 06) திறந்துவைத்தார்.

இதைத் தொடர்ந்து, அந்த அறையை பார்வையிட்ட காவல் கண்காணிப்பாளர், இங்கு உள்ள அனைத்து விளையாட்டுப் பொருள்களையும் காட்சிப்பொருளாக வைக்க வேண்டாம். இவையாவும் குழந்தைகள் விளையாடுவதற்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.