ETV Bharat / state

வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 1,405 இந்தியர்கள் சென்னை வந்தனர்!

சென்னை: கரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவித்த ஆயிரத்து 405 இந்தியர்கள் மீட்பு விமானங்கள் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

author img

By

Published : Sep 10, 2020, 3:16 PM IST

Flight passengers
Flight passengers

கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தின் மூலம் மீட்பு விமானங்களில் இந்தியா அழைத்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்கா, சிங்கபூர்,மலேசியா, குவைத், ரியாத், ஓமன், கத்தாா், துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கடந்த இரண்டு தினங்களில் 12 மீட்பு விமானங்களில், ஆயிரத்து 405 இந்தியா்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களில் 840 பேர் வெளிநாடுகளிலேயே மருத்துவ சான்றிதழ்கள் பெற்றுவந்தனர். அவர்களுக்கான சுங்கச் சோதனைகளை முடித்து சுகாதாரத்துறையினா் அவர்கள் கைகளில் தனிமைப்படுத்துதலுக்கான ரப்பா் ஸ்டாம்பு முத்திரையிட்டு அவரவர் வீடுகளுக்கு அனுப்பினர்.

மருத்துவ சான்றிதழ்களுடன் வராத 565 இந்தியா்களுக்கு சென்னை விமான நிலையத்தில், சுகாதாரத்துறையினா் மருத்துவப் பரிசோதனை செய்து வீடுகளுக்கு தனிமைப்படுத்த அனுப்பினர்.
மீட்பு விமானங்களில் வரும் வெளியூர் பயணிகள் அவரவரவர் ஊர்களுக்கு செல்வதற்காக அரசு நான்கு சிறப்பு சொகுசு பேருந்துகளை இயக்கியது. அந்த பேருந்துகள் சென்னை விமான நிலையத்திற்குள்ளேயே வந்து பயணிகளை ஏற்றிச் சென்றன.

ஆனால் நேற்று (செப்.9) இரவிலிருந்து எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி அந்த பேருந்துகள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் அந்தனை எதிா்பாா்த்திருந்தப் பயணிகள் ஏமாற்றமடைந்து வாடகை கார், வேன்களில் சென்றனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தின் மூலம் மீட்பு விமானங்களில் இந்தியா அழைத்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்கா, சிங்கபூர்,மலேசியா, குவைத், ரியாத், ஓமன், கத்தாா், துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கடந்த இரண்டு தினங்களில் 12 மீட்பு விமானங்களில், ஆயிரத்து 405 இந்தியா்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களில் 840 பேர் வெளிநாடுகளிலேயே மருத்துவ சான்றிதழ்கள் பெற்றுவந்தனர். அவர்களுக்கான சுங்கச் சோதனைகளை முடித்து சுகாதாரத்துறையினா் அவர்கள் கைகளில் தனிமைப்படுத்துதலுக்கான ரப்பா் ஸ்டாம்பு முத்திரையிட்டு அவரவர் வீடுகளுக்கு அனுப்பினர்.

மருத்துவ சான்றிதழ்களுடன் வராத 565 இந்தியா்களுக்கு சென்னை விமான நிலையத்தில், சுகாதாரத்துறையினா் மருத்துவப் பரிசோதனை செய்து வீடுகளுக்கு தனிமைப்படுத்த அனுப்பினர்.
மீட்பு விமானங்களில் வரும் வெளியூர் பயணிகள் அவரவரவர் ஊர்களுக்கு செல்வதற்காக அரசு நான்கு சிறப்பு சொகுசு பேருந்துகளை இயக்கியது. அந்த பேருந்துகள் சென்னை விமான நிலையத்திற்குள்ளேயே வந்து பயணிகளை ஏற்றிச் சென்றன.

ஆனால் நேற்று (செப்.9) இரவிலிருந்து எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி அந்த பேருந்துகள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் அந்தனை எதிா்பாா்த்திருந்தப் பயணிகள் ஏமாற்றமடைந்து வாடகை கார், வேன்களில் சென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.