ETV Bharat / state

வெளிநாடு அழைத்து செல்வதாகக் கூறி டிராவல்ஸ் அதிபர் மோசடி

author img

By

Published : May 27, 2019, 7:01 PM IST

திருப்பூர்: உலக நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பலரிடம் ஒரு கோடிக்கு மேல் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள், டிராவல்ஸ் அதிபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி டிராவல்ஸ் அதிபர் மோசடி

திருப்பூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் எல்.ஐ.சி முகவர் சங்க மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது சங்கத்தினர் வெளிநாடு சுற்றுலா செல்ல அவிநாசி சாலையில் உள்ள டிராவல் கிராப்ட் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் மணிகண்டன் என்பவரை அணுகியுள்ளனர். முதல் கட்டமாக 35 பேர் மலேசியா சென்று வந்தனர். இந்நிலையில், அடுத்து 30 பேர் செல்ல திட்டமிடப்பட்டு ரூ.10 லட்சத்தை டிராவல் கிராப்ட் உரிமையாளரிடம் கொடுத்துள்ளனர்.

அதேபோல், காந்திநகர் பகுதியை சேர்ந்த சந்திர சேகர் என்பவர் குடும்ப சுற்றுலா செல்ல , பயண டிக்கெட் மற்றும் செலவுக்கு வெளிநாட்டு பணம் மாற்றி பெற என மொத்தம் ரூ. 28 லட்சம் கொடுத்துள்ளார். இந்நிலையில், டிராவல் உரிமையாளர், அவர்களை சுற்றுலா அழைத்து செல்லவும் இல்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, சுற்றுலா செல்ல ஒரு கோடிக்கும் மேல் பணம் கொடுத்துள்ளதாகவும், தங்கள் பணம் மற்றும் பாஸ்போர்ட் ஆவணங்களை மீட்டுத்தரக்கோரி 10க்கு மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி டிராவல்ஸ் அதிபர் மோசடி

திருப்பூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் எல்.ஐ.சி முகவர் சங்க மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது சங்கத்தினர் வெளிநாடு சுற்றுலா செல்ல அவிநாசி சாலையில் உள்ள டிராவல் கிராப்ட் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் மணிகண்டன் என்பவரை அணுகியுள்ளனர். முதல் கட்டமாக 35 பேர் மலேசியா சென்று வந்தனர். இந்நிலையில், அடுத்து 30 பேர் செல்ல திட்டமிடப்பட்டு ரூ.10 லட்சத்தை டிராவல் கிராப்ட் உரிமையாளரிடம் கொடுத்துள்ளனர்.

அதேபோல், காந்திநகர் பகுதியை சேர்ந்த சந்திர சேகர் என்பவர் குடும்ப சுற்றுலா செல்ல , பயண டிக்கெட் மற்றும் செலவுக்கு வெளிநாட்டு பணம் மாற்றி பெற என மொத்தம் ரூ. 28 லட்சம் கொடுத்துள்ளார். இந்நிலையில், டிராவல் உரிமையாளர், அவர்களை சுற்றுலா அழைத்து செல்லவும் இல்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, சுற்றுலா செல்ல ஒரு கோடிக்கும் மேல் பணம் கொடுத்துள்ளதாகவும், தங்கள் பணம் மற்றும் பாஸ்போர்ட் ஆவணங்களை மீட்டுத்தரக்கோரி 10க்கு மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி டிராவல்ஸ் அதிபர் மோசடி
மலேசியா, சிங்கப்பூர் என உலக நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பலரிடம்  ஒரு கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் டிராவல்ஸ் அதிபர் மீது காவல் நிலையத்தில் புகார்.

திருப்பூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் எல்.ஐ.சி முகவர் சங்க மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது சங்கம் மூலம் வெளிநாட்டு சுற்றுலா செல்ல திட்டமிடப்பட்டு அவிநாசி சாலையில் உள்ள டிராவல் கிராப்ட் என்ற நிறுவனத்தின்உரிமையாளர் மணிகண்டன் என்பவரை  அணுகியுள்ளனர். முதல் கட்டமாக 35 பேர் மலேசியா சென்று வந்த நிலையில் அடுத்து 30 பேர் செல்ல திட்டமிடப்பட்டு 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். அதே போல காந்திநகர் பகுதியை சேர்ந்த சந்திர சேகர் என்பவரும் குடும்ப சுற்றுலா செல்ல திட்டமிட்டு பயண டிக்கெட், மற்றும் செலவுக்கு வெளிநாட்டு பணம் மாற்றி பெற என 28 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் தொடர்ந்து தாங்கள் அலைகழிக்கப்பட்ட நிலையில் தற்போது அலுவலகத்தை மூடிவிட்டதாகவும் தங்களை போலவே பலர் குழுவாக வெளிநாட்டு சுற்றுலா செல்ல ஒரு கோடிக்கும் மேல் பணம் கொடுத்துள்ளதாகவும் தங்கள் பணம் மற்றும் பாஸ்போர்ட் ஆவணங்களை மீட்டுத்தர கோரி பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

பேட்டி: பணம் கட்டி பாதிக்கப்பட்ட  மணிகண்டன்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.