ETV Bharat / state

மதுபோதையில் பேருந்து நடத்துனரை தாக்கிய இரு இளைஞர்களுக்கு தர்ம அடி! - tirupur

திருப்பூர்: பழைய பேருந்து நிலையம் அருகே அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய இரண்டு இளைஞர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பூர்
author img

By

Published : May 5, 2019, 7:04 PM IST

ஈரோட்டில் இருந்து திருப்பூர் வந்த அரசு பேருந்து திருப்பூர் பழைய பேருந்து நிலையம் உள்ளே செல்ல முற்பட்டபோது, மதுபோதையில் தள்ளாடிய இரண்டு இளைஞர்களை வழிவிட நடத்துனர் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், பேருந்தில் இருந்த நடத்துனரை சரமாரியாக தாக்கினர்.

நடத்துனரை தாக்கிய இரண்டு இளைஞர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி

இதனை பார்த்த பொதுமக்கள் கோபமடைந்து, இரு இளைஞர்களுக்கும் தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த நடத்துனர் ராமசாமி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் இரண்டு இளைஞர்களும் சிதம்பரத்தைச் சேர்ந்த ரவி மற்றும் சூர்யா என்பதும், இருவரும் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர் எனத் தெரியவந்துள்ளது.

ஈரோட்டில் இருந்து திருப்பூர் வந்த அரசு பேருந்து திருப்பூர் பழைய பேருந்து நிலையம் உள்ளே செல்ல முற்பட்டபோது, மதுபோதையில் தள்ளாடிய இரண்டு இளைஞர்களை வழிவிட நடத்துனர் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், பேருந்தில் இருந்த நடத்துனரை சரமாரியாக தாக்கினர்.

நடத்துனரை தாக்கிய இரண்டு இளைஞர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி

இதனை பார்த்த பொதுமக்கள் கோபமடைந்து, இரு இளைஞர்களுக்கும் தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த நடத்துனர் ராமசாமி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் இரண்டு இளைஞர்களும் சிதம்பரத்தைச் சேர்ந்த ரவி மற்றும் சூர்யா என்பதும், இருவரும் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர் எனத் தெரியவந்துள்ளது.

திருப்பூர்: மது போதையில் அரசு பேருந்து நடத்துநரை தாக்கிய இரு இளைஞர்களுக்கு தர்ம அடி.


ஈரோட்டில் இருந்து திருப்பூர் வந்த அரசு பேருந்து திருப்பூர் பழைய பேருந்து நிலையம் உள்ளே செல்ல முற்பட்ட போது மது போதையில் சாலையில் தள்ளாடிய இரண்டு இளைஞர்களை வழி விட கூறியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்தில் ஏறி நடத்துநரை சரமாரியாக தாக்கியுள்ளனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் இரு இளைஞர்களுக்கும் தர்ம அடி கொடுத்து போலிசில் ஒப்படைத்தனர். காயமடைந்த நடத்துநர் ராமசாமி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். விசாரணையில் இளைஞர்கள் இருவரும் சிதம்பரத்தை சேர்ந்த ரவி மற்றும் சூர்யா என்பதும் இருவரும் திருப்பூரில் தங்கி பணியாற்றி வருவதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.