ETV Bharat / state

முதலமைச்சர் பழனிசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது

திருப்பூர்: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

author img

By

Published : Aug 13, 2019, 10:02 AM IST

Updated : Aug 14, 2019, 10:01 AM IST

arrest

தமிழ்நாட்டில் பெய்துவரும் மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. அந்த வகையில் சேலத்தில் உள்ள மேட்டூர் அணையும் தற்போது நிரம்பி வருகிறது. இந்நிலையில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

முன்னதாக நேற்று இரவு சென்னையில் உள்ள காவல் துறை கட்டுப்பாட்டு அறையை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட ஒருவர், நாளை (இன்று) தமிழ்நாடு முதலைமச்சர் பழனிசாமி மேட்டூர் அணையை திறக்க வரும்போது, அப்பகுதியில் வெடிகுண்டு வெடிக்கும் எனக் கூறி மிரட்டு விடுத்து தனது அழைப்பை துண்டித்தார்.

முதலமைச்சர் பழனிசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆடியோ

இதைத் தொடர்ந்து அந்த நபரின் செல்போன் எண்ணைக் கொண்டு காவல் துறையினர் ஆய்வு செய்ததில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் குழியூரைச் சேர்த்த தேவகிருஷ்ணன் (எ) குமார் என்பது தெரியவந்தது. பின்னர் சென்னை கட்டுப்பாட்டு அறையிலிருந்து வந்த தகவலின் அடிப்படையில், உடுமலை சரக கணியூர் காவல் துறையினர் தேவகிருஷ்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பெய்துவரும் மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. அந்த வகையில் சேலத்தில் உள்ள மேட்டூர் அணையும் தற்போது நிரம்பி வருகிறது. இந்நிலையில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

முன்னதாக நேற்று இரவு சென்னையில் உள்ள காவல் துறை கட்டுப்பாட்டு அறையை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட ஒருவர், நாளை (இன்று) தமிழ்நாடு முதலைமச்சர் பழனிசாமி மேட்டூர் அணையை திறக்க வரும்போது, அப்பகுதியில் வெடிகுண்டு வெடிக்கும் எனக் கூறி மிரட்டு விடுத்து தனது அழைப்பை துண்டித்தார்.

முதலமைச்சர் பழனிசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆடியோ

இதைத் தொடர்ந்து அந்த நபரின் செல்போன் எண்ணைக் கொண்டு காவல் துறையினர் ஆய்வு செய்ததில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் குழியூரைச் சேர்த்த தேவகிருஷ்ணன் (எ) குமார் என்பது தெரியவந்தது. பின்னர் சென்னை கட்டுப்பாட்டு அறையிலிருந்து வந்த தகவலின் அடிப்படையில், உடுமலை சரக கணியூர் காவல் துறையினர் தேவகிருஷ்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Intro:திருப்பூரில் தமிழக முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Body:தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பெய்த மழை காரணமாக அனைத்து அணைகளும் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் மேட்டூர் அணை நிரம்பியதால் அந்த அணையை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு மேட்டூர் அணையை திறந்து வைக்க தமிழக முதல்வர் பழனிச்சாமி வரும்போது அந்த பகுதியில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அழைப்பு வந்த செல்போன் எண்ணை வைத்து தேடியதில் திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் குழியூரை சேர்த்த தேவகிருஷ்ணன் (எ) குமார் என்பது தெரியவந்தது.சென்னை கட்டுபாட்டு அறையிலிருந்து வந்த தகவலின் பேரில் உடுமலை சரக கணியூர் போலீசார் தேவகிருஷ்ணன் (எ) குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Conclusion:
Last Updated : Aug 14, 2019, 10:01 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.