ETV Bharat / state

20% விபத்து குறைந்துள்ளது- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் - சாலைப் பாதுகாப்பு வாரம்

திருப்பூர்: சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் விளைவாக கடந்தாண்டை விட இந்தாண்டு திருப்பூரில் 20 விழுக்காடு வாகன விபத்துகள் குறைந்துள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Minister Udumalai Radhakrishnan byte  அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்  சாலைப் பாதுகாப்பு வாரம்  road accident in tiruppur
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
author img

By

Published : Jan 25, 2020, 4:17 PM IST

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறைகளில் சிறந்த விளங்கிய ஓட்டுநர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நற்சான்றிதழ் வழங்கிய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 20 விழுக்காடு விபத்துகள் குறைந்துள்ளன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை திருப்பூர் மாவட்டம் விபத்தில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்படவுள்ளன. விபத்துகளை குறைக்க இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளைக் கடைபிடித்து விபத்தில்லா மாவட்டமாக திருப்பூர் மாவட்டத்தை மாற்றவேண்டும்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு இணை இயக்குனர் தலைமையில் சிறப்பு மருத்துவக் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அம்மா ஆம்புலன்ஸ் தயார் நிலையில் அப்பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்படும். காளைகளுக்கு காயம் ஏற்பட்டால் உடனுக்குடன் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூரில் பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுவருகின்றன.

இதையும் படிங்க: ’சி.ஏ.ஏ. குடியுரிமையை பறிக்கும் சட்டமல்ல; குடியுரிமையை வழங்கும் சட்டம்’ - அமைச்சர் விளக்கம்

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறைகளில் சிறந்த விளங்கிய ஓட்டுநர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நற்சான்றிதழ் வழங்கிய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 20 விழுக்காடு விபத்துகள் குறைந்துள்ளன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை திருப்பூர் மாவட்டம் விபத்தில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்படவுள்ளன. விபத்துகளை குறைக்க இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளைக் கடைபிடித்து விபத்தில்லா மாவட்டமாக திருப்பூர் மாவட்டத்தை மாற்றவேண்டும்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு இணை இயக்குனர் தலைமையில் சிறப்பு மருத்துவக் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அம்மா ஆம்புலன்ஸ் தயார் நிலையில் அப்பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்படும். காளைகளுக்கு காயம் ஏற்பட்டால் உடனுக்குடன் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூரில் பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுவருகின்றன.

இதையும் படிங்க: ’சி.ஏ.ஏ. குடியுரிமையை பறிக்கும் சட்டமல்ல; குடியுரிமையை வழங்கும் சட்டம்’ - அமைச்சர் விளக்கம்

Intro:சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மூலமாக கடந்த ஆண்டை விட 20 சதவிகித வாகன விபத்துகள் குறைந்துள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம். பிப்ரவரி இரண்டாம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் அனைத்து காளைகளும் பங்கேற்க விழாக்குழுவினர் உடன் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேட்டி.

Body:சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறைகளில் சிறந்த விளங்கிய ஓட்டுனர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நற்சான்றிதழ் வழங்கிய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 சதவிகிதம் விபத்துக்கள் குறைந்துள்ளதாகவும், தமிழகத்தைப் பொருத்தவரை திருப்பூர்மாவட்டம் விபத்தில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் விபத்துக்களை குறைக்க இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க வேண்டும் எனவும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு இணை இயக்குநர் தலைமையில் சிறப்பு மருத்துவ குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அம்மா ஆம்புலன்ஸ் தயார் நிலையில் அப்பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்படுவதாகவும், காளைகளுக்கு காயம் ஏற்பட்டால் உடனுக்குடன் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் திருப்பூரில் பிப்ரவரி 2-ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் காளைகள் பதிவு செய்வதில் குளறுபடிகள் இருப்பதை களைய ஜல்லிக்கட்டு குழுவினரை அழைத்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து காளைகளும் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.