திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட அவினாசி ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் பணிகள் பெரியாயிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவருகின்றன. அங்கு பணிபுரியும் அலுவலர்களுக்கு காலை நேர உணவு வழங்க தாமதமாகியுள்ளது.
இதனையடுத்து அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியை நிறுத்திவிட்டு பள்ளி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் உயர் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உயர் அலுவலர்களின் பேச்சுவார்த்தைக்குப் பின் வாக்கு எண்ணும் பணியை அலுவலர்கள் தொடங்கினர்.
இதையும் படிங்க: மதுரையில் வாக்கு எண்ணிக்கை: விரிவான தகவல்