ETV Bharat / state

திருப்பூரில் கோயில் சிலைகள் உடைப்பு: காவல்துறை தீவிர விசாரணை!

author img

By

Published : Aug 4, 2020, 7:15 PM IST

திருப்பூர்: கோயில் சிலையை உடைத்த அடையாளம் தெரியாத நபரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

திருப்பூரில் கோயில் சிலைகள் உடைப்பு: காவல் துறை தீவிர விசாரணை!
திருப்பூரில் கோயில் சிலைகள் உடைப்பு: காவல் துறை தீவிர விசாரணை!

திருப்பூர் கல்லூரி சாலை காளிபாளையம் புதூரில் உள்ள சங்கிலிகருப்பராயன் கோயிலில் நேற்றிரவு (ஆகஸ்ட் 3) அடையாளம் தெரியாத நபர்கள் சாமி சிலைகளை உடைத்துள்ளனர். இதனையடுத்து இன்று (ஆகஸ்ட் 4) காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலை உடைந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து பொதுமக்கள் வேலம்பாளையம் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடம் வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தடயவியல் நிபுணர்கள் கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சாமி சிலை, வேண்டுதலுக்காக வைக்கப்பட்ட சிலைகள் என 10க்கும் மேற்பட்ட சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. கோயில் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க...வாசனை இழந்த ஏலத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்!

திருப்பூர் கல்லூரி சாலை காளிபாளையம் புதூரில் உள்ள சங்கிலிகருப்பராயன் கோயிலில் நேற்றிரவு (ஆகஸ்ட் 3) அடையாளம் தெரியாத நபர்கள் சாமி சிலைகளை உடைத்துள்ளனர். இதனையடுத்து இன்று (ஆகஸ்ட் 4) காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலை உடைந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து பொதுமக்கள் வேலம்பாளையம் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடம் வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தடயவியல் நிபுணர்கள் கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சாமி சிலை, வேண்டுதலுக்காக வைக்கப்பட்ட சிலைகள் என 10க்கும் மேற்பட்ட சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. கோயில் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க...வாசனை இழந்த ஏலத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.