ETV Bharat / state

திருப்பூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட மீன் வியாபாரிகள் நலச் சங்கம்!

author img

By

Published : Oct 16, 2020, 7:11 PM IST

திருப்பூர்: மீன் வியாபாரிகள் நலச் சங்கம் தொடக்க விழாவில் நலிவடைந்த மீன் வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மீன் வியாபாரிகள் நல சங்கம்
மீன் வியாபாரிகள் நல சங்கம்

திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (அக். 16) திருப்பூர் மாவட்ட மீன் வியாபாரிகள் நலச் சங்கம் தொடங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மீன் வியாபாரிகளின் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று உரிய தீர்வு காணவும், மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் நலச் சங்கம் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கரோனா காலத்தில் வியாபாரம் இல்லாததால் மிகவும் நலிவடைந்த மீன் வியாபாரிகளுக்கு சங்கத்தின் சார்பாக பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள காசோலைகள் வழங்கப்பட்டன. மேலும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் மீன் கடைகளைச் சுகாதாரத்துடன் வைத்திருப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (அக். 16) திருப்பூர் மாவட்ட மீன் வியாபாரிகள் நலச் சங்கம் தொடங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மீன் வியாபாரிகளின் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று உரிய தீர்வு காணவும், மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் நலச் சங்கம் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கரோனா காலத்தில் வியாபாரம் இல்லாததால் மிகவும் நலிவடைந்த மீன் வியாபாரிகளுக்கு சங்கத்தின் சார்பாக பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள காசோலைகள் வழங்கப்பட்டன. மேலும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் மீன் கடைகளைச் சுகாதாரத்துடன் வைத்திருப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாக உள்ளது' - நயினார் நாகேந்திரன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.