ETV Bharat / state

ஆம்பூர் அருகே தேனீக்கள் கொட்டியதில் இளைஞர் உயிரிழப்பு - தமிழ் குற்ற செய்திகள்

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே மலைப்பகுதியில் தேன் எடுக்க சென்ற இளைஞர், தேனீக்கள் கொட்டியதால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Youth killed in bee bitten near Ambur
Youth killed in bee bitten near Ambur
author img

By

Published : Jul 11, 2020, 4:47 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்டகுண்டா பகுதியை சேர்ந்தவர் சாமு (28). தேன் எடுப்பதை பிரதான தொழிலாக கொண்ட இவர், ஜூலை 8ஆம் தேதி இரவு தனது நண்பர்களுடன் தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் உள்ள மலைப்பகுதிகளில் தேன் எடுக்கச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு முழுவதும் மலைப்பகுதிகளில் மழை பெய்ததால், சாமு மற்றும் அவரது நண்பர்கள் மலைப்பகுதியிலேயே தங்கியுள்ளனர். இதையடுத்து நேற்று (ஜூலை 10) காலை 3 மணியளவில் தேன் எடுக்க சாமு பாறையினுள் இறங்கிய போது, தேனீக்கள் கொட்டியதில் சாமு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து அவரது நண்பர்கள் 2 பேர் தங்கள் கிராமத்திற்கு வந்து சாமு இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் ஊர் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தப் பின்னர், சிலர் மலைப்பகுதியிற்கு சென்று இறந்த சாமுவின் உடலை மீட்டு தங்கள் கிராமத்திற்கு கொண்டு வந்தனர்.

பின்னர் தகவலறிந்து வந்த உமராபாத் காவல்துறையினர், இளைஞரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இது பசு வதையல்ல... பசு வன்புணர்வு! சிக்கிய நபர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்டகுண்டா பகுதியை சேர்ந்தவர் சாமு (28). தேன் எடுப்பதை பிரதான தொழிலாக கொண்ட இவர், ஜூலை 8ஆம் தேதி இரவு தனது நண்பர்களுடன் தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் உள்ள மலைப்பகுதிகளில் தேன் எடுக்கச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு முழுவதும் மலைப்பகுதிகளில் மழை பெய்ததால், சாமு மற்றும் அவரது நண்பர்கள் மலைப்பகுதியிலேயே தங்கியுள்ளனர். இதையடுத்து நேற்று (ஜூலை 10) காலை 3 மணியளவில் தேன் எடுக்க சாமு பாறையினுள் இறங்கிய போது, தேனீக்கள் கொட்டியதில் சாமு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து அவரது நண்பர்கள் 2 பேர் தங்கள் கிராமத்திற்கு வந்து சாமு இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் ஊர் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தப் பின்னர், சிலர் மலைப்பகுதியிற்கு சென்று இறந்த சாமுவின் உடலை மீட்டு தங்கள் கிராமத்திற்கு கொண்டு வந்தனர்.

பின்னர் தகவலறிந்து வந்த உமராபாத் காவல்துறையினர், இளைஞரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இது பசு வதையல்ல... பசு வன்புணர்வு! சிக்கிய நபர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.