ETV Bharat / state

ஆம்பூரில் மின்வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்த விவகாரம் - சட்டவிரோத மின்வேலி அமைத்த இருவர் கைது..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 10:23 PM IST

ambur electric fence death issue: ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்த விவகாரத்தில் சட்ட விரோதமாக வனவிலங்குகளை வேட்டையாட மின்வேலி அமைத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

ambur electric fence death issue
சட்ட விரோதமாக வனவிலங்குகளை வேட்டையாட மின்வேலி அமைத்த இருவர் கைது

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் 1-ஆவது தார்வழி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார் இவர் அதே பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் உள்ள நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் குத்தகைக்கு எடுத்த நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதாகக் கூறி, ஜெயகுமார் மற்றும் அவரது மைத்துனர் வெங்கடேசன் ஆகியோர் ஒன்றாக கடந்த டிசம்பர் 3ஆம் தேதி இரவு வனவிலங்குகளை விரட்ட நிலத்திற்குச் சென்று உள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த விவசாய நிலத்தில், வனவிலங்குகளை வேட்டையாட அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஜெயகுமார் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் பின்னர் வெகுநேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பாததால், அவர்களது உறவினர்கள் அவர்களைப் பல இடங்களில் தேடியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மலை அடிவார பகுதியில் உள்ள நிலத்திற்குச் சென்று பார்த்த போது இருவரும் வனவிலங்குகளை வேட்டையாடப் போடப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. பின்னர் உடனடியாக அப்பகுதி மக்கள் இச்சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் தொடர்ச்சியாக இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் இரண்டாவது தார்வழி பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்குச் சொந்தமான விளைநிலத்தில் இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் வந்து நிலத்தை நாசம் செய்வதாகக் கூறி காட்டுப்பன்றிகளை வேட்டையாட அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவருடன் சேர்ந்து நடராஜன் சட்டவிரோதமாக விளைநிலத்தில் மின்வேலி அமைத்த போது அதில் சிக்கி ஜெயகுமார், மற்றும் வெங்கடேசன் உயிரிழந்தது காவல்துறையினருக்குத் தெரியவந்தது.

இதனை அடுத்து உடனடியாக காட்டுப்பன்றிகளை வேட்டையாடச் சட்டவிரோதமாக விளை நிலத்தில் மின்வேலி அமைத்த நடராஜன் மற்றும் மணியை ஆம்பூர் நகர காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல்: காட்பாடி மார்க்க ரயில்கள் ரத்து - பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள்!

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் 1-ஆவது தார்வழி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார் இவர் அதே பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் உள்ள நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் குத்தகைக்கு எடுத்த நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதாகக் கூறி, ஜெயகுமார் மற்றும் அவரது மைத்துனர் வெங்கடேசன் ஆகியோர் ஒன்றாக கடந்த டிசம்பர் 3ஆம் தேதி இரவு வனவிலங்குகளை விரட்ட நிலத்திற்குச் சென்று உள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த விவசாய நிலத்தில், வனவிலங்குகளை வேட்டையாட அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஜெயகுமார் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் பின்னர் வெகுநேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பாததால், அவர்களது உறவினர்கள் அவர்களைப் பல இடங்களில் தேடியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மலை அடிவார பகுதியில் உள்ள நிலத்திற்குச் சென்று பார்த்த போது இருவரும் வனவிலங்குகளை வேட்டையாடப் போடப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. பின்னர் உடனடியாக அப்பகுதி மக்கள் இச்சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் தொடர்ச்சியாக இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் இரண்டாவது தார்வழி பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்குச் சொந்தமான விளைநிலத்தில் இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் வந்து நிலத்தை நாசம் செய்வதாகக் கூறி காட்டுப்பன்றிகளை வேட்டையாட அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவருடன் சேர்ந்து நடராஜன் சட்டவிரோதமாக விளைநிலத்தில் மின்வேலி அமைத்த போது அதில் சிக்கி ஜெயகுமார், மற்றும் வெங்கடேசன் உயிரிழந்தது காவல்துறையினருக்குத் தெரியவந்தது.

இதனை அடுத்து உடனடியாக காட்டுப்பன்றிகளை வேட்டையாடச் சட்டவிரோதமாக விளை நிலத்தில் மின்வேலி அமைத்த நடராஜன் மற்றும் மணியை ஆம்பூர் நகர காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல்: காட்பாடி மார்க்க ரயில்கள் ரத்து - பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.