ETV Bharat / state

பழங்குடியின குடும்பத்தினருக்கு அறுசுவை உணவு படைத்த கோவில் நிர்வாகம்!

author img

By

Published : Apr 3, 2020, 8:55 AM IST

திருப்பத்தூர்: ஊரடங்கு உத்தரவால், உணவின்றி தவித்த 37 பழங்குடியின குடும்பங்களுக்கு தர்மசாஸ்தா கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

temple-administration-food-issue-gypsy
temple-administration-food-issue-gypsy

தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத் துறை உள்பட பல்வேறு துறையினர் கரோன தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணிசெய்யும் அவர்களுக்கு காலை, மதிய உணவு வழங்க ஆம்பூர் அருகே உள்ள தர்ம சாஸ்தா கோவில் நிர்வாகம் தாமாக முன்வந்தது. இதன்படி, தர்மசாஸ்தா கோயில் நிர்வாகிகள் தினமும் ஒவ்வொரு துறையினருக்கும் உணவு வழங்கி வந்தனர்.

இந்நிலையில், சோலூர் நமாஸ்மேடு பகுதியில் உணவின்றி தவித்த 37 பழங்குடியின குடும்பங்களுக்கு, மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் அறுசுவை உணவு வழங்கினர்.

பசியாற்றிய தர்மசாஸ்தா கோவில் நிர்வாகம்

பின்னர், அவர்களிடையே, கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அரசு அறிவித்துள்ள தடை உத்தரவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், அத்தியாவசிய பொருள்களை வாங்க வெளியில் சென்று வரும்போது கை, கால்களை சோப்பு கொண்டு கழுவ வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கோவிட்19 வைரஸ் தொற்றுக்கு எதிர்கொள்ளும் அரசின் அவசரக்கால திட்டம் என்ன?

தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத் துறை உள்பட பல்வேறு துறையினர் கரோன தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணிசெய்யும் அவர்களுக்கு காலை, மதிய உணவு வழங்க ஆம்பூர் அருகே உள்ள தர்ம சாஸ்தா கோவில் நிர்வாகம் தாமாக முன்வந்தது. இதன்படி, தர்மசாஸ்தா கோயில் நிர்வாகிகள் தினமும் ஒவ்வொரு துறையினருக்கும் உணவு வழங்கி வந்தனர்.

இந்நிலையில், சோலூர் நமாஸ்மேடு பகுதியில் உணவின்றி தவித்த 37 பழங்குடியின குடும்பங்களுக்கு, மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் அறுசுவை உணவு வழங்கினர்.

பசியாற்றிய தர்மசாஸ்தா கோவில் நிர்வாகம்

பின்னர், அவர்களிடையே, கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அரசு அறிவித்துள்ள தடை உத்தரவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், அத்தியாவசிய பொருள்களை வாங்க வெளியில் சென்று வரும்போது கை, கால்களை சோப்பு கொண்டு கழுவ வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கோவிட்19 வைரஸ் தொற்றுக்கு எதிர்கொள்ளும் அரசின் அவசரக்கால திட்டம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.