ETV Bharat / state

பயன்பாட்டிற்கு வராத பொதுக்கழிப்பிடத்தை உடைத்து கம்பிகள் திருட்டு

author img

By

Published : Dec 4, 2020, 9:30 AM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே இரண்டு ஆண்டுகளாகப் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் இருந்த பொதுக்கழிப்பிடத்தை உடைத்து அதிலுள்ள கம்பிகளை அப்பகுதி இளைஞர்கள் திருடி பழைய இரும்புக் கடையில் விற்பனை செய்கின்றனர்.

Public toilet rod theft
Public toilet rod theft

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்துள்ள உதயேந்திரம் பேரூராட்சிக்குள்பட்ட பாரதி நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. அப்பகுதி மக்கள் இயற்கை உபாதை கழிக்கச் செல்ல வேண்டும் என்றால் அங்குள்ள பாலாற்றுப் பகுதிக்குச் சென்றுவந்தனர்.

இந்நிலையில் அவர்களின் பயன்பாட்டிற்காக உதயேந்திரம் பேரூராட்சி சார்பில் 2018ஆம் ஆண்டு தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் 6.80 லட்சம் மதிப்பீட்டில் ஆறு கழிவறைகள் கொண்ட பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டு மின் இணைப்பு, தண்ணீர் போன்ற எந்த அடிப்படை வசதியும் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டது.

தண்ணீர், மின் வசதி இன்றி பொதுமக்கள் அந்தக் கழிவறையைப் பயன்படுத்தாமல் இயற்கை உபாதை கழிக்கச் செல்ல பாலாற்றுப் பகுதிக்குச் சென்றுவந்தனர். தற்போது தொடர்மழை காரணமாக வெள்ளம் வந்து தண்ணீர் நிரம்பியுள்ளதால் பாலாற்றில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு கடந்த வாரம் ரித்திக் என்ற 12 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

நீர் நிரம்பியுள்ளதால் யாரும் பாலாற்றுப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று பேரூராட்சி நிர்வாகம் தண்டோரா போட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. தற்போது உயிரிழப்பு நிகழ்வதால் பாலாற்றிற்குச் செல்ல அச்சம் அடைந்து அப்பகுதி மக்கள் இயற்கை உபாதை கழிக்கச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

உடனடியாக அந்தக் கழிவறையைப் புனரமைத்துப் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கிடப்பில் போடப்பட்ட அந்தக் கழிவறைச் சுவர்களில் உள்ள இரும்புக் கம்பிகளை உடைத்து அவற்றை பழைய இரும்புக் கடையில் கொடுத்து பணம் வாங்கிச் செல்லுகின்றனர். இதன் காணொலி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்துள்ள உதயேந்திரம் பேரூராட்சிக்குள்பட்ட பாரதி நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. அப்பகுதி மக்கள் இயற்கை உபாதை கழிக்கச் செல்ல வேண்டும் என்றால் அங்குள்ள பாலாற்றுப் பகுதிக்குச் சென்றுவந்தனர்.

இந்நிலையில் அவர்களின் பயன்பாட்டிற்காக உதயேந்திரம் பேரூராட்சி சார்பில் 2018ஆம் ஆண்டு தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் 6.80 லட்சம் மதிப்பீட்டில் ஆறு கழிவறைகள் கொண்ட பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டு மின் இணைப்பு, தண்ணீர் போன்ற எந்த அடிப்படை வசதியும் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டது.

தண்ணீர், மின் வசதி இன்றி பொதுமக்கள் அந்தக் கழிவறையைப் பயன்படுத்தாமல் இயற்கை உபாதை கழிக்கச் செல்ல பாலாற்றுப் பகுதிக்குச் சென்றுவந்தனர். தற்போது தொடர்மழை காரணமாக வெள்ளம் வந்து தண்ணீர் நிரம்பியுள்ளதால் பாலாற்றில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு கடந்த வாரம் ரித்திக் என்ற 12 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

நீர் நிரம்பியுள்ளதால் யாரும் பாலாற்றுப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று பேரூராட்சி நிர்வாகம் தண்டோரா போட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. தற்போது உயிரிழப்பு நிகழ்வதால் பாலாற்றிற்குச் செல்ல அச்சம் அடைந்து அப்பகுதி மக்கள் இயற்கை உபாதை கழிக்கச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

உடனடியாக அந்தக் கழிவறையைப் புனரமைத்துப் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கிடப்பில் போடப்பட்ட அந்தக் கழிவறைச் சுவர்களில் உள்ள இரும்புக் கம்பிகளை உடைத்து அவற்றை பழைய இரும்புக் கடையில் கொடுத்து பணம் வாங்கிச் செல்லுகின்றனர். இதன் காணொலி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.