ETV Bharat / state

எருது விடும் விழாவில் இளைஞர் உயிரிழப்பு.. போலீசார் மீது குற்றச்சாட்டு..

author img

By

Published : Jan 19, 2023, 10:16 AM IST

Updated : Jan 19, 2023, 3:52 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே எருது விடும் விழாவில் மாடு முட்டி காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார். இவர் போலீசார் தாக்கியதாலேயே உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாடு முட்டிய இளைஞரை போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக மாடு பிடி வீரர்கள் தர்ணா
மாடு முட்டிய இளைஞரை போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக மாடு பிடி வீரர்கள் தர்ணா

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கல்நார்சாம்பட்டி பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் எருது விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நேற்று (ஜனவரி 18) எருது விடும் திருவிழா மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் காலை 8 மணி முதல் 2 மணி வரை எருது நடந்தது.

இதனிடையே 2.30 மணி அளவில் மாடு முட்டியதில் பெரியகம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த தவுலத் மகன் முஷரப் (19) என்ற இளைஞர் காயமடைந்தார். இதனால் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இளைஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மீட்ட கிராமத்தினர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞரின் உறவினர்களும், அப்பகுதி இளைஞர்களும் போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அடிமந்தையில் தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

அதன்பின் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதுகுறித்து திருப்பதூர் போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், எருது விடும் விழாவில் பாதுகாப்பு கருதி சில மாடுகளை ஓட அனுமதிக்கவில்லை. இதனால் மாட்டு உரிமையாளர்கள் காவல்துறை தாக்கியதாலேயே இளைஞர் உயிரிழந்ததாக பொய்யான தகவலை பரப்பினர்.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். இந்த தாக்குதலில் ஆயுதப்படை காவலர் திருமாலுக்கு வலதுபக்க கண்புருவத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொய்யான தகவல்கள் மற்றும் வதந்திகளை பரப்புவர்கள் மீது சட்ட ரீதியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய ரவுடி - சினிமா பாணியில் துரத்திப் பிடித்த போலீஸ்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கல்நார்சாம்பட்டி பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் எருது விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நேற்று (ஜனவரி 18) எருது விடும் திருவிழா மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் காலை 8 மணி முதல் 2 மணி வரை எருது நடந்தது.

இதனிடையே 2.30 மணி அளவில் மாடு முட்டியதில் பெரியகம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த தவுலத் மகன் முஷரப் (19) என்ற இளைஞர் காயமடைந்தார். இதனால் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இளைஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மீட்ட கிராமத்தினர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞரின் உறவினர்களும், அப்பகுதி இளைஞர்களும் போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அடிமந்தையில் தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

அதன்பின் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதுகுறித்து திருப்பதூர் போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், எருது விடும் விழாவில் பாதுகாப்பு கருதி சில மாடுகளை ஓட அனுமதிக்கவில்லை. இதனால் மாட்டு உரிமையாளர்கள் காவல்துறை தாக்கியதாலேயே இளைஞர் உயிரிழந்ததாக பொய்யான தகவலை பரப்பினர்.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். இந்த தாக்குதலில் ஆயுதப்படை காவலர் திருமாலுக்கு வலதுபக்க கண்புருவத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொய்யான தகவல்கள் மற்றும் வதந்திகளை பரப்புவர்கள் மீது சட்ட ரீதியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய ரவுடி - சினிமா பாணியில் துரத்திப் பிடித்த போலீஸ்

Last Updated : Jan 19, 2023, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.