திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சாத்தம்பாக்கம் ஊராட்சியில் நேற்று (அக். 15) வழக்கம் போல் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த மரம் ஒன்றிலிருந்து கிளம்பிய செங்குளவிகள் பணியாளர்களை கொட்டியது. இதனை தொடர்ந்து பணியாளர்கள் இங்கும் அங்கும் ஓடினர்.
அதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக பணி செய்யும் போது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பணி தொடங்கப்படவதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் இளைஞரை கடித்த அரிய வகை விஷப் பூச்சி