ETV Bharat / state

நாட்டறம்பள்ளியில் விபத்து- கூலித் தொழிலாளி பலி

author img

By

Published : Jan 25, 2022, 12:51 PM IST

நாட்டறம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நாட்டறம்பள்ளியில் விபத்து- கூலித் தொழிலாளி பலி
நாட்டறம்பள்ளியில் விபத்து- கூலித் தொழிலாளி பலி

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே மல்லபள்ளி ஏரியூர் கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் பிரபு (வயது 23) இவர் கூலி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் ஏரியூரிலிருந்து புதுப்பேட்டைக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது மல்லப்பள்ளி புதுப்பேட்டை சாலையில் அம்சியம்மன் கோயில் அருகில் செல்லும் போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் பிரபு தலையில் பலத்த படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்துத் தகவலறிந்ததும் நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் காவலர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து நாட்டறம்பள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:India corona cases: நாட்டின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே மல்லபள்ளி ஏரியூர் கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் பிரபு (வயது 23) இவர் கூலி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் ஏரியூரிலிருந்து புதுப்பேட்டைக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது மல்லப்பள்ளி புதுப்பேட்டை சாலையில் அம்சியம்மன் கோயில் அருகில் செல்லும் போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் பிரபு தலையில் பலத்த படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்துத் தகவலறிந்ததும் நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் காவலர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து நாட்டறம்பள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:India corona cases: நாட்டின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.