ETV Bharat / state

வாணியம்பாடியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் திருட்டு: போலீசார் விசாரணை! - Tirupattur district news

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே ஒரே தெருவில் இரண்டு இருசக்கர வாகனங்களை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை காவல் துறையினர் சிசிடிவி காணொலி பதிவுகளைக் கொண்டு தேடி வருகின்றனர்.

ஒரே தெருவில் 2 இருசக்கர வாகனங்கள் திருட்டு
ஒரே தெருவில் 2 இருசக்கர வாகனங்கள் திருட்டு
author img

By

Published : Aug 24, 2020, 10:57 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருபவர் அம்பிகா. இவர் தனது மகன் அறிவழகனுடன் வாணியம்பாடி நியூடவுன் நாஸ்கர் பகுதியில் வசித்து வருகிறார்.

நேற்று (ஆக.23) இரவு வீட்டின் வாசலில் அறிவழகன் 1.50 லட்சம் மதிப்பிலான தனது ராயல் என்ஃபீல்ட் புல்லட் வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இன்று (ஆக.24) காலை அவர் வீட்டின் வாசலில் வந்து பார்த்துபோது அந்த வாகனம் கொள்ளை போனது தெரியவந்தது.

ஒரே தெருவில் 2 இருசக்கர வாகனங்கள் திருட்டு

இதே போல் அதே தெருவில் தப்ஸீர் என்பவர் வீட்டின் முன்பு நிற்க வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனமும் திருடப்பட்டுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிசிடிவி காணொலி பதிவுகளை வைத்து இருசக்கர வாகனத்தை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

சென்ற 15 நாள்களில் வாணியம்பாடி நகர பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் வாகனம் திருட்டு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருபவர் அம்பிகா. இவர் தனது மகன் அறிவழகனுடன் வாணியம்பாடி நியூடவுன் நாஸ்கர் பகுதியில் வசித்து வருகிறார்.

நேற்று (ஆக.23) இரவு வீட்டின் வாசலில் அறிவழகன் 1.50 லட்சம் மதிப்பிலான தனது ராயல் என்ஃபீல்ட் புல்லட் வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இன்று (ஆக.24) காலை அவர் வீட்டின் வாசலில் வந்து பார்த்துபோது அந்த வாகனம் கொள்ளை போனது தெரியவந்தது.

ஒரே தெருவில் 2 இருசக்கர வாகனங்கள் திருட்டு

இதே போல் அதே தெருவில் தப்ஸீர் என்பவர் வீட்டின் முன்பு நிற்க வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனமும் திருடப்பட்டுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிசிடிவி காணொலி பதிவுகளை வைத்து இருசக்கர வாகனத்தை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

சென்ற 15 நாள்களில் வாணியம்பாடி நகர பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் வாகனம் திருட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.