திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே கோனாமேடு அம்பேத்கர் நகர்ப் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கர்(43). இவருக்கு சரசு என்ற மனைவியும் சக்திவேல்(15), சரத்குமார்(13) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 23) அவர் இயற்கை உபாதையைக் கழிக்க பெருமாள்பேட்டை பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது, பெங்களூருவிலிருந்து சென்னை சென்ற சரக்கு ரயில், அவர் மீது மோதியதில் பாஸ்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
![Auto driver died while crossing the railway tracks](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11:32:43:1598162563_tn-tpt-02-train-accident-one-dead-vis-scr-pic-tn10018_23082020111535_2308f_1598161535_976.jpg)
பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.