ETV Bharat / state

பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 9:57 PM IST

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 10 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இளம் பெண் பாலியல் வழக்கு
இளம் பெண் பாலியல் வழக்கு

தூத்துக்குடி: கடந்த 2019ஆம் ஆண்டு 20 வயது இளம் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த சாகுல் ஹமீது மகன் முகமது தாரிக் (எ) முகமது நசீர் (24) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கை அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா புலன் விசாரணை செய்து கடந்த 10.03.2020 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம் இன்று (31.10.2023) குற்றவாளியான முகமது தாரிக் (எ) முகமது நசீர் என்பவருக்கு 10 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும், 6 மாதம் மெய்க்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூபாய் 7,000 அபராதமும் விதித்து மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் சிறை தண்டனை அனுபவிக்க உத்தவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள் அவர்களையும், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை பெண் காவலர் ரபீலா குமாரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.

இதையும் படிங்க: தறிகெட்டு ஓடிய ஆம்னி பேருந்து.. அடுத்தடுத்து 4 பேர் மீது மோதி கோர விபத்து! இரண்டு பேர் பரிதாப பலி!

தூத்துக்குடி: கடந்த 2019ஆம் ஆண்டு 20 வயது இளம் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த சாகுல் ஹமீது மகன் முகமது தாரிக் (எ) முகமது நசீர் (24) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கை அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா புலன் விசாரணை செய்து கடந்த 10.03.2020 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம் இன்று (31.10.2023) குற்றவாளியான முகமது தாரிக் (எ) முகமது நசீர் என்பவருக்கு 10 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும், 6 மாதம் மெய்க்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூபாய் 7,000 அபராதமும் விதித்து மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் சிறை தண்டனை அனுபவிக்க உத்தவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள் அவர்களையும், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை பெண் காவலர் ரபீலா குமாரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.

இதையும் படிங்க: தறிகெட்டு ஓடிய ஆம்னி பேருந்து.. அடுத்தடுத்து 4 பேர் மீது மோதி கோர விபத்து! இரண்டு பேர் பரிதாப பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.