ETV Bharat / state

திருநங்கையின் திருமணத்திற்கு அங்கீகாரம் அளித்த அரசு - transgender marraige

தூத்துக்குடி : திருநங்கையை காதல் திருமணம் செய்துக்கொண்டவரின் திருமணத்திற்கு, தமிழ்நாடு அரசு திருமணப்பதிவு சான்றிதழ் வழங்கியுள்ளது.

அருண்குமார் -ஸ்ரீஜா
author img

By

Published : May 20, 2019, 6:13 PM IST

தூத்துக்குடி மாவட்டம் சங்கரபேரி பகுதியைச் சேர்ந்த அருண்குமாரும், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜா என்ற திருநங்கையும் காதலித்துவந்தனர். இந்நிலையில், 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தூத்துக்குடி சிவன் கோயிலில் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இதையடுத்து இவர்களது திருமணத்தை சட்டப்படி பதிவு செய்வதற்காக தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர்.

அப்பொழுது தமிழ்நாடு சட்ட விதிமுறைகளின்படி அருண்குமார் -ஸ்ரீஜா திருமணத்தை பதிவு செய்ய இயலாது என்றும், ஆண் திருநங்கையின் திருமணத்தை பதிவு செய்ய வழி ஏதும் இல்லாததால் உங்களுடைய திருமணத்தை பதிவு செய்ய முடியவில்லை என்றும் சார்பதிவாளர் கூறியதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினரின் திருமணத்தை பதிவு செய்து திருமண பதிவு சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை கடந்த மாதம் விசாரித்த நீதிமன்றம், அருண்குமார் ஸ்ரீஜா தம்பதியினரின் திருமணத்தை பதிவு செய்து அவர்களுக்கு திருமண பதிவு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். கலப்பு திருமணத்திற்கு தமிழ்நாடு அரசு அளிக்கும் சலுகைகள் அனைத்தும் அருண்குமார் -ஸ்ரீஜா தம்பதிகள் பெற தகுதியானவர்கள் எனக் கூறி உத்தரவிட்டிருந்தது.

சார் பதிவாளர் செய்தியாளர் சந்திப்பு

நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர் இன்று தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்களின் திருமணத்தை இந்து சட்ட விதிமுறைகளின்படி பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர். அதன் அடிப்படையில் அவர்களுக்கு திருமண பதிவுச்சான்று வழங்குவதற்கான ரசீது வழங்கப்பட்டது.

பின்னர், அருண்குமார்-ஸ்ரீஜா தம்பதியினர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், '2018ஆம் ஆண்டு எங்களது திருமணம் நடைபெற்றது. தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக ஆண் - திருநங்கையின் திருமணத்தை அரசு அங்கீகரித்து திருமண பதிவு சான்றிதழ் வழங்குவது இதுவே முதல் முறை. ஆகவே இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது' என்று தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சங்கரபேரி பகுதியைச் சேர்ந்த அருண்குமாரும், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜா என்ற திருநங்கையும் காதலித்துவந்தனர். இந்நிலையில், 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தூத்துக்குடி சிவன் கோயிலில் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இதையடுத்து இவர்களது திருமணத்தை சட்டப்படி பதிவு செய்வதற்காக தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர்.

அப்பொழுது தமிழ்நாடு சட்ட விதிமுறைகளின்படி அருண்குமார் -ஸ்ரீஜா திருமணத்தை பதிவு செய்ய இயலாது என்றும், ஆண் திருநங்கையின் திருமணத்தை பதிவு செய்ய வழி ஏதும் இல்லாததால் உங்களுடைய திருமணத்தை பதிவு செய்ய முடியவில்லை என்றும் சார்பதிவாளர் கூறியதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினரின் திருமணத்தை பதிவு செய்து திருமண பதிவு சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை கடந்த மாதம் விசாரித்த நீதிமன்றம், அருண்குமார் ஸ்ரீஜா தம்பதியினரின் திருமணத்தை பதிவு செய்து அவர்களுக்கு திருமண பதிவு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். கலப்பு திருமணத்திற்கு தமிழ்நாடு அரசு அளிக்கும் சலுகைகள் அனைத்தும் அருண்குமார் -ஸ்ரீஜா தம்பதிகள் பெற தகுதியானவர்கள் எனக் கூறி உத்தரவிட்டிருந்தது.

சார் பதிவாளர் செய்தியாளர் சந்திப்பு

நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர் இன்று தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்களின் திருமணத்தை இந்து சட்ட விதிமுறைகளின்படி பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர். அதன் அடிப்படையில் அவர்களுக்கு திருமண பதிவுச்சான்று வழங்குவதற்கான ரசீது வழங்கப்பட்டது.

பின்னர், அருண்குமார்-ஸ்ரீஜா தம்பதியினர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், '2018ஆம் ஆண்டு எங்களது திருமணம் நடைபெற்றது. தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக ஆண் - திருநங்கையின் திருமணத்தை அரசு அங்கீகரித்து திருமண பதிவு சான்றிதழ் வழங்குவது இதுவே முதல் முறை. ஆகவே இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது' என்று தெரிவித்தனர்.


தூத்துக்குடி சங்கர பேரி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ஸ்ரீஜா. திருநங்கையான இவர் தூத்துக்குடியில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் இளங்கலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த ஆண்டு 31.10.2018 அன்று தூத்துக்குடி சிவன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இவர்களின் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்வதற்காக தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர். அப்பொழுது தமிழக சட்ட விதிமுறைகளின்படி அருண்குமார்- ஸ்ரீஜாவின் திருமணத்தை பதிவு செய்ய இயலாது எனவும், ஆண் திருநங்கையின் திருமணத்தை பதிவு செய்வதற்கு வழிவகை இல்லாததால் உங்களுடைய திருமணத்தை பதிவு செய்ய முடியவில்லை என சார்பதிவாளர் கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர் பல கட்டங்களாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இடத்தில் புகார் அளித்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர் தங்களின் திருமணத்தை பதிவு செய்து திருமண பதிவு சான்றிதழ் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு கூறியது. அதில் அருண்குமார் ஸ்ரீஜா தம்பதியினரின் திருமணத்தை பதிவு செய்து அவர்களுக்கு திருமண பதிவு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்றும் கலப்பு திருமணத்திற்கு தமிழக அரசு அளிக்கும் சலுகைகள் அனைத்தும் அருண்குமார் -ஸ்ரீஜா தம்பதிகள் பெற தகுதியானவர்கள் என்று கூறியும் உத்தரவிட்டிருந்தது.  நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து இன்று அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர் தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து தங்களின் திருமணத்தை இந்து சட்ட விதிமுறைகளின்படி பதிவு செய்ய விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தனர். அதன் அடிப்படையில் அவர்களுக்கு திருமண பதிவு பதிவு சான்று வழங்குவதற்கான ரசீது வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் இருவரும் அனைவரின் முன்னிலையில் மோதிரம், மாலை மாற்றி கொண்டனர்.

பல கட்ட சட்டப் போராட்டத்தை அடுத்து அருண்குமார் - ஸ்ரீஜா தம்பதியினருக்கு திருமண பதிவு சான்றிதழ் காண ரசீது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து அருண்குமார் ஸ்ரீஜா தம்பதியினர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
கடந்த ஆண்டு எங்களது திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சட்ட விதிமுறைகளின்படி எங்களின் திருமணத்தை பதிவு செய்ய வழி இல்லை என கூறினர். அதன் பேரில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தோம். கோர்ட் உத்தரவின் அடிப்படையில் இன்று எங்களது திருமணத்தை பதிவு செய்துள்ளோம். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. தமிழகத்திலேயே முதல்முறையாக ஆண் - திருநங்கையின் திருமணத்தை அரசு அங்கீகரித்து திருமண பதிவு சான்றிதழ் வழங்குவது இதுவே முதல் முறை. ஆகவே இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார்.

Visual FTP

And also send through reporter app
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.