ETV Bharat / state

'ஜின் பிங் வருகையை மத்திய அரசு அரசியலாக்கக் கூடாது' - கே.எஸ்.அழகிரி!

author img

By

Published : Oct 12, 2019, 7:36 PM IST

தூத்துக்குடி: சீன அதிபர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வருவதை மத்திய அரசு அவர்களுக்குச் சாதகமாக பயன்படுத்தக்கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ks alagiri

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனின் வெற்றி பிரகாசமாக உள்ளது. மதச்சார்பற்ற கூட்டணி என்பது மக்களை ஒன்றுபடுத்துகிற கூட்டணி. சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்கக்கூடிய கூட்டணி அல்ல. எனவே மக்கள் எங்களுக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளார்கள்.

சீன அதிபர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகிற விஷயங்களை, நாம் உலக விஷயமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். அதை வைத்து ஆளுங்கட்சியினர் அரசியல் செய்யக்கூடாது. பிரதமர் நரேந்திர மோடி தமிழ்ப்பண்பாடு கலாசாரத்தை ஏற்றுக் கொண்டால் அது மகிழ்ச்சி. ஆனால், அதற்காக பாஜகவினர் பிறமொழிகளை நம் மீது திணிக்கக் கூடாது.

சீன பிரதமர் சந்திப்பின் மூலமாக இருநாட்டு ராஜதந்திர தொடர்புகள் அதிகரித்தால் நன்று. தேர்தலில் அதிமுக கூட்டணி என்பது ஒரு விசித்திரமான கூட்டணி. பாஜக நிலைப்பாடு என்ன? பாமகவின் நிலை என்ன? என்பதெல்லாம் நமக்குப் புரியாத ஒன்று. ஆனாலும், ஒரு விதி வசத்தால் அந்தக் கூட்டணி ஓடிக்கொண்டிருக்கிறது. கொள்கை வசத்தால் ஓடவில்லை. அவர்களுடைய கூட்டணிக் கட்சிகள் பற்றி அவர்களுக்கே ஒன்றும் தெரியாதபோது, நாம் என்ன சொல்ல முடியும்"என்றார்.

கே.எஸ்.அழகிரி பேட்டி

மேலும் படிக்க: 'அதிமுக அமைச்சர்களின் பொழுதுபோக்கே பணம் கொடுப்பதுதான்’ - கேஎஸ் அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனின் வெற்றி பிரகாசமாக உள்ளது. மதச்சார்பற்ற கூட்டணி என்பது மக்களை ஒன்றுபடுத்துகிற கூட்டணி. சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்கக்கூடிய கூட்டணி அல்ல. எனவே மக்கள் எங்களுக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளார்கள்.

சீன அதிபர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகிற விஷயங்களை, நாம் உலக விஷயமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். அதை வைத்து ஆளுங்கட்சியினர் அரசியல் செய்யக்கூடாது. பிரதமர் நரேந்திர மோடி தமிழ்ப்பண்பாடு கலாசாரத்தை ஏற்றுக் கொண்டால் அது மகிழ்ச்சி. ஆனால், அதற்காக பாஜகவினர் பிறமொழிகளை நம் மீது திணிக்கக் கூடாது.

சீன பிரதமர் சந்திப்பின் மூலமாக இருநாட்டு ராஜதந்திர தொடர்புகள் அதிகரித்தால் நன்று. தேர்தலில் அதிமுக கூட்டணி என்பது ஒரு விசித்திரமான கூட்டணி. பாஜக நிலைப்பாடு என்ன? பாமகவின் நிலை என்ன? என்பதெல்லாம் நமக்குப் புரியாத ஒன்று. ஆனாலும், ஒரு விதி வசத்தால் அந்தக் கூட்டணி ஓடிக்கொண்டிருக்கிறது. கொள்கை வசத்தால் ஓடவில்லை. அவர்களுடைய கூட்டணிக் கட்சிகள் பற்றி அவர்களுக்கே ஒன்றும் தெரியாதபோது, நாம் என்ன சொல்ல முடியும்"என்றார்.

கே.எஸ்.அழகிரி பேட்டி

மேலும் படிக்க: 'அதிமுக அமைச்சர்களின் பொழுதுபோக்கே பணம் கொடுப்பதுதான்’ - கேஎஸ் அழகிரி

Intro:உலகத் தலைவர்கள் வருகிற விஷயங்களை உள்ளூர் அரசியலுக்கு ஆளுங்கட்சியினர் பயன்படுத்தக்கூடாது - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
Body:

தூத்துக்குடி


தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வெற்றி பிரகாசமாக உள்ளது.
மதசார்பற்ற கூட்டணி என்பது மக்களை ஒன்றுபடுத்துகிற கூட்டணி. ஜாதியின் பெயரால் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்ககூடிய கூட்டணி அல்ல.
சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையே 5 ஆயிரம் ஆண்டு கால கலாச்சார பாரம்பரியம் உண்டு. நவீன காலத்தில் பண்டித ஜவகர்லால் நேரு பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கி இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தினார். இன்று அதனுடைய தொடர்ச்சியாக சீன அதிபர் வந்திருக்கிறார். இதனால் அவருக்கும், நமக்கும் தொழில் ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக பல உடன்பாடுகள் ஏற்பட்டால் அது ஏற்றுக்கொள்ளக்கூடியது. மகிழ்ச்சி அளிக்கக் கூடியது.

உலகத் தலைவர்கள் வருகிற விஷயங்களை, உலக விஷயங்களை நாம் உலக விஷயமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். அதை உள்ளூர் அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது என்பதனை ஆளுங்கட்சியினர் உணர வேண்டும்.
பிரதமர் மோடி தமிழ் பண்பாடு கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டால் அது மகிழ்ச்சி. ஆனால் அதற்காக பாஜகவினர் பிறமொழிகளை நம் மீது திணிக்கக் கூடாது.
சீன பிரதமர் சந்திப்பின் மூலமாக இருநாட்டு ராஜதந்திர தொடர்புகள் அதிகரித்தால் நன்று.
நமக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை, தலாய்லாமா பிரச்சனை, வரி விதிப்பு இருக்கிறது எனவே அதைப் பற்றி உடன்படிக்கைகள் ஏதாவது இரு அரசாங்கத்திற்கும் இடையே ஏற்பட்டால் அது குறித்து கருத்து சொல்லலாம்.
நம் நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருள்களை பிற நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை தவிர்க்க வேண்டும்.
இரு நாடுகளுக்கு இடையே உடன்படிக்கை போடுகிற பொழுது நமக்கு பாதுகாப்பானது எது பாதுகாப்பற்றது எது என்பது அதை செய்யவேண்டும்.
வெறும் மதத்தை மட்டுமே வைத்து அரசியல் செய்கிறவர்கள் பாரதிய ஜனதாவினர். நானோ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ நாங்கள் இந்துக்கள் அல்ல என்று கூறிக் கொண்டது கிடையாது. ஆனால் எல்லாவற்றையுமே மதம், ஜாதி என்று பார்க்க முடியாது. வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற உலகம். எனவே எல்லா கலாச்சாரத்தையும் அங்கீகரிப்போம், ஏற்றுக்கொள்கிறோம். எனவே இவர் இந்து விரோதி, இவர் முஸ்லிம் விரோதி, இவர் (மு.க.ஸ்டாலின்) கிறிஸ்தவ விரோதி என்று சொன்னால் அதைவிட இழிவானது மலிவான அரசியல் பிரச்சாரம் எதுவும் இல்லை.
இந்த அரசாங்கத்தில் சட்டம் ஒழுங்கு என்பது முற்றிலுமாக தோல்வியடைந்து இருக்கிறது. தூத்துக்குடியில் கூட இரண்டு மாதங்களில் ஏறக்குறைய 20 கொலைகள் நடந்து இருப்பதாக பத்திரிக்கை வாயிலாக அறிந்து கொண்டேன். தவறு செய்தவர்கள் யார் என தெரிந்தும் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது காரணமாக தான் இதுபோன்ற கொலைகள் நடைபெறுகிறது. ஒரு நாகரிகமான சமூகத்தில் கொலை என்பது அருவருக்கத்தக்க ஒன்று. அதே போல் மாணவர்கள் விஷயத்தில் கல்லூரி நிர்வாகம், பெற்றோரும், அரசு ஆகியவை ஒரு கண்காணிப்பு ஏற்படுத்த வேண்டும். கலைத்துறை கூட இதற்கு ஒரு காரணம். சினிமாவை பார்த்து மாணவர்கள் கெட்டுப் போகிறார்கள். எனவே நாம் சினிமா கூடாது என்று சொல்லமுடியாது. சினிமாவில் நடிப்பவர்கள் கொஞ்சம் பொறுப்போடு நடிக்க வேண்டும். அதே போல அரசாங்கமும் மாணவர்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும்.
பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் பள்ளிகளிலிருந்த ஒழுக்க வகுப்புகள் எல்லாம் தற்சமயம் இல்லாமல் போய் விட்டது. ஆகவே இது ஒரு சமூகப் பிரச்சனை. இது அரசியல் பிரச்சனையாக்க விரும்பவில்லை. இதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
அதிமுக கூட்டணி என்பது ஒரு விசித்திரமான கூட்டணி. பாரதிய ஜனதாவின் நிலைபாடு என்ன?. பாமகவின் நிலை என்ன என்பதெல்லாம் நமக்கு புரியாத ஒன்று. ஆனாலும் ஒரு விதி வசத்தால் அந்தக் கூட்டணி ஓடிக்கொண்டிருக்கிறது. கொள்கை வசத்தால் ஓடவில்லை. அவர்களுடைய கூட்டணிக் கட்சிகள் பற்றி அவர்களுக்கே ஒன்றும் தெரியாத பொழுது நாம் என்ன சொல்ல முடியும் என்றார்.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.