ETV Bharat / state

'தூத்துக்குடியில் கரோனா பரிசோதனைகள் அதிகரித்துள்ளன' - மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி: முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடியில் கரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Aug 1, 2020, 10:41 PM IST

தூத்துக்குடி மாவட்டச் செய்திகள்  சந்திப் நந்தூரி  சந்திப் நந்தூரி ஆய்வு  thoothukudi collector sandeep nandhuri  thoothukudi district news
'தூத்துக்குடியில் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன' - மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி, பரிசோதனை முகாமை மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, பரிசோதனை நடைபெறும் இடங்களில் எத்தனை நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்கிற விவரங்களை சேகரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு பணியில் தூத்துக்குடி மாவட்டம் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் உரையாற்றும் போது, மாவட்டத்தில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தக் கூறினார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாயிரமாக இருந்த பரிசோதனைகளின் எண்ணிக்கை தற்போது இரண்டாயிரத்து 300ஆக உயர்ந்துள்ளது.

'தூத்துக்குடியில் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன' - மாவட்ட ஆட்சியர்

மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையின் விழுக்காடு 16ஆக உள்ளது. விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு சீல் வைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: ஜெயராஜ், பென்னிக்ஸ் உடற்கூறாய்வு காணொலி வெளியீடு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி, பரிசோதனை முகாமை மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, பரிசோதனை நடைபெறும் இடங்களில் எத்தனை நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்கிற விவரங்களை சேகரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு பணியில் தூத்துக்குடி மாவட்டம் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் உரையாற்றும் போது, மாவட்டத்தில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தக் கூறினார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாயிரமாக இருந்த பரிசோதனைகளின் எண்ணிக்கை தற்போது இரண்டாயிரத்து 300ஆக உயர்ந்துள்ளது.

'தூத்துக்குடியில் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன' - மாவட்ட ஆட்சியர்

மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையின் விழுக்காடு 16ஆக உள்ளது. விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு சீல் வைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: ஜெயராஜ், பென்னிக்ஸ் உடற்கூறாய்வு காணொலி வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.