ETV Bharat / state

சீர்த்திருத்தங்கள் கொண்டு வந்தால்தான் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியும் - திருநாவுக்கரசர்

author img

By

Published : Oct 18, 2019, 7:35 PM IST

தூத்துக்குடி: தேர்தலில் சீர்த்திருத்தங்கள் கொண்டுவந்தால்தான் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியும் என்று திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

thirunavukkarasar

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக திருநாவுக்கரசர் எம்.பி. இன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.

திருநாவுக்கரசர் செய்தியாளர்கள் சந்திப்பு

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு பாஜக ஆட்சியால் எந்த நன்மையும் ஏற்படவில்லை. இந்தியா முழுவதும் வேலையில்லா திண்டாட்டம், வறுமை அதிகரித்துள்ளது. பொருளாதாரம் நலிந்துபோய் உள்ளது. இப்படிப்பட்ட மத்திய அரசுக்கு ஒத்துப் போகக்கூடிய அரசாக பினாமியாக இங்குள்ள அரசு செயல்பட்டுவருகிறது" என்று விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசுகையில், கே.டி. ராஜேந்திரபாலாஜி அமைச்சர் பொறுப்பிலிருந்து கொண்டு தான்தோன்றித்தனமாக பேசுவதும் கீழ்த்தரமாக தலைவர்கள், மற்ற சமுதாயம், ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களை விமர்சிப்பதும் மாபெரும் தவறாகும் எனக் கண்டித்தார். இதை காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார்.

மேலும், தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வதென்பது ஜனநாயகத்திற்கு சீரழிவு என வேதனை தெரிவித்த அவர், ஒவ்வொரு முறையும் தேர்தலின்போது ஜனநாயகம் கேலிக் கூத்தாவதாகவும் குறிப்பிட்டார். தேர்தலில் சீர்த்திருத்தங்கள் கொண்டுவந்தால்தான் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக திருநாவுக்கரசர் எம்.பி. இன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.

திருநாவுக்கரசர் செய்தியாளர்கள் சந்திப்பு

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு பாஜக ஆட்சியால் எந்த நன்மையும் ஏற்படவில்லை. இந்தியா முழுவதும் வேலையில்லா திண்டாட்டம், வறுமை அதிகரித்துள்ளது. பொருளாதாரம் நலிந்துபோய் உள்ளது. இப்படிப்பட்ட மத்திய அரசுக்கு ஒத்துப் போகக்கூடிய அரசாக பினாமியாக இங்குள்ள அரசு செயல்பட்டுவருகிறது" என்று விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசுகையில், கே.டி. ராஜேந்திரபாலாஜி அமைச்சர் பொறுப்பிலிருந்து கொண்டு தான்தோன்றித்தனமாக பேசுவதும் கீழ்த்தரமாக தலைவர்கள், மற்ற சமுதாயம், ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களை விமர்சிப்பதும் மாபெரும் தவறாகும் எனக் கண்டித்தார். இதை காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார்.

மேலும், தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வதென்பது ஜனநாயகத்திற்கு சீரழிவு என வேதனை தெரிவித்த அவர், ஒவ்வொரு முறையும் தேர்தலின்போது ஜனநாயகம் கேலிக் கூத்தாவதாகவும் குறிப்பிட்டார். தேர்தலில் சீர்த்திருத்தங்கள் கொண்டுவந்தால்தான் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

Intro:தேர்தலில் சீர்திருத்தங்கள் கொண்டு வந்தால்தான் பணப் பட்டுவாடாவை தடுக்க முடியும் - திருநாவுக்கரசர் எம்.பி.பேட்டிBody:தேர்தலில் சீர்திருத்தங்கள் கொண்டு வந்தால்தான் பணப் பட்டுவாடாவை தடுக்க முடியும் - திருநாவுக்கரசர் எம்.பி.பேட்டி

தூத்துக்குடி


நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக திருநாவுக்கரசர் எம்.பி. இன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில்,

கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழகத்திற்கு பிஜேபி ஆட்சியால் எந்த நன்மையும் ஏற்படவில்லை.
இந்திய நாடு முழுவதும் மூன்றுக்கு ஒருவர் வேலையில்லாமல் சிரமப்படக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை அதிகரித்துள்ளது. பொருளாதாரம் நலிந்து போய் உள்ளது. இப்படிப்பட்ட மத்திய அரசுக்கு ஒத்துப் போகக்கூடிய அரசாங்கமாக பினாமியாக இங்குள்ள அரசு செயல்பட்டு வருகிறது.

மாநில அரசு, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கலாம். ஆனால் மத்திய அரசுக்கு பயந்து, பணிந்து அடிமையாக இருக்கக் கூடாது. அனுசரித்தல் என்ற பெயரில் அடிமையாக கிடக்கிறார்கள். கே.டி.ராஜேந்திர பாலாஜி அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு தான்தோன்றித்தனமாக பேசுவதும் கீழ்தரமாக தலைவர்களை விமர்சிப்பது, சமுதாயத்தை விமர்சிப்பது, ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களை விமர்சிப்பது மாபெரும் தவறாகும். இது மிகுந்த கண்டனத்திற்குரியது. இதை காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வது என்பது ஜனநாயகத்திற்கு சீரழிவுதான். ஒவ்வொரு முறையும் தேர்தலின்போது ஜனநாயகம் கேலிக் கூத்தாகி கொண்டிருக்கிறது.
தேர்தலில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
தேர்தலில் சீர்திருத்தங்கள் கொண்டு வந்தால்தான் பணப் பட்டுவாடாவை தடுக்க முடியும்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.