ETV Bharat / state

ஸ்டெர்லைட் போராட்டங்களில் பங்கெடுத்தவர் வாகன விபத்தில் உயிரிழப்பு!

author img

By

Published : Dec 8, 2020, 7:06 PM IST

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் எதிர்ப்பு என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

Sterlite protester died in road accident
Sterlite protester

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இளையபெருமாள் (36) புகைப்படம், ஒளிப்பதிவு கலைஞரான இவர், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களில் பங்கு பெற்றவர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தமிழர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியின் நெருங்கிய நண்பரான இவர், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களில் சமூக போராளியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் இளையபெருமாள் தூத்துக்குடி சத்யாநகருக்குட்பட்ட பகுதியில் வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் தனது நண்பர் பிரேம் ஆனந்துடன் வந்த போது நாய் குறுக்கே பாய்ந்ததில் நிலைதடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி இளைய பெருமாள் தூக்கி வீசப்பட்டார், பிரேம் ஆனந்த் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

தொடர்ந்து அதிக ரத்த இழப்பினால் இளைய பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இளையபெருமாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இளையபெருமாள் (36) புகைப்படம், ஒளிப்பதிவு கலைஞரான இவர், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களில் பங்கு பெற்றவர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தமிழர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியின் நெருங்கிய நண்பரான இவர், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களில் சமூக போராளியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் இளையபெருமாள் தூத்துக்குடி சத்யாநகருக்குட்பட்ட பகுதியில் வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் தனது நண்பர் பிரேம் ஆனந்துடன் வந்த போது நாய் குறுக்கே பாய்ந்ததில் நிலைதடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி இளைய பெருமாள் தூக்கி வீசப்பட்டார், பிரேம் ஆனந்த் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

தொடர்ந்து அதிக ரத்த இழப்பினால் இளைய பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இளையபெருமாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.