ETV Bharat / state

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி

author img

By

Published : Jan 2, 2020, 10:11 AM IST

தூத்துக்குடி: பனிமய மாதா ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி
தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி


உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள் புத்தாண்டு பண்டிகையை மிக உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழ்ந்தனர். கிறிஸ்தவ மக்கள் அதிகம் வசிக்கும் ஊர்களில் ஒன்றான தூத்துக்குடியில் புத்தாண்டு திருநாளை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

புனித பனிமய மாதா பேராலயம், திரு இருதய மேற்றிராசன ஆலயம், புனித அந்தோணியார் ஆலயம், புனித வளனார் ஆலயம் உள்ளிட்ட நகரின் அனைத்து தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி

இரவு 11.30 மணியிலிருந்தே புத்தாடை அணிந்து குடும்பத்துடன் தேவாலயத்திற்கு வந்த கிறிஸ்தவ மக்கள் புத்தாண்டு சிறப்பு திருப்பலியில் பங்கேற்றனர்.

புனித பனிமய மாதா பேராலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு திருப்பலி அருள்தந்தை குமார்ராஜா தலைமையில் நடைபெற்றது. திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.

அதேபோல், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் பிரசித்திப்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம், கீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் புகழ்பெற்றதாகும்.

இங்கு ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் வகையில், 2019ஆம் ஆண்டை நன்றியுடன் வழியனுப்பும்விதமாக பங்கு பாதிரியார் சூசை மாணிக்கம் தலைமையில் மறையூரையும், 2020ஆம் ஆண்டை வரவேற்று நள்ளிரவு 12 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட பாதிரியார்களின் சிறப்பு திருப்பலி வழிபாடும் நடைபெற்றது.

தருமபுரியிலும் ஆங்கில புது வருடத்தையொட்டி பேராலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. அப்போது கிறிஸ்தவ பெருமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பின்னர், ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்தை பரிமாறிக்கொண்டனர். அதேபோல் 2020ஆம் ஆண்டிற்கான உறுதிமொழியையும் அவர்கள் எடுத்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: நீலகிரியில் கோலாகலமாக தொடங்கிய ஹெத்தையம்மன் திருவிழா!


உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள் புத்தாண்டு பண்டிகையை மிக உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழ்ந்தனர். கிறிஸ்தவ மக்கள் அதிகம் வசிக்கும் ஊர்களில் ஒன்றான தூத்துக்குடியில் புத்தாண்டு திருநாளை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

புனித பனிமய மாதா பேராலயம், திரு இருதய மேற்றிராசன ஆலயம், புனித அந்தோணியார் ஆலயம், புனித வளனார் ஆலயம் உள்ளிட்ட நகரின் அனைத்து தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி

இரவு 11.30 மணியிலிருந்தே புத்தாடை அணிந்து குடும்பத்துடன் தேவாலயத்திற்கு வந்த கிறிஸ்தவ மக்கள் புத்தாண்டு சிறப்பு திருப்பலியில் பங்கேற்றனர்.

புனித பனிமய மாதா பேராலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு திருப்பலி அருள்தந்தை குமார்ராஜா தலைமையில் நடைபெற்றது. திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.

அதேபோல், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் பிரசித்திப்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம், கீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் புகழ்பெற்றதாகும்.

இங்கு ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் வகையில், 2019ஆம் ஆண்டை நன்றியுடன் வழியனுப்பும்விதமாக பங்கு பாதிரியார் சூசை மாணிக்கம் தலைமையில் மறையூரையும், 2020ஆம் ஆண்டை வரவேற்று நள்ளிரவு 12 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட பாதிரியார்களின் சிறப்பு திருப்பலி வழிபாடும் நடைபெற்றது.

தருமபுரியிலும் ஆங்கில புது வருடத்தையொட்டி பேராலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. அப்போது கிறிஸ்தவ பெருமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பின்னர், ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்தை பரிமாறிக்கொண்டனர். அதேபோல் 2020ஆம் ஆண்டிற்கான உறுதிமொழியையும் அவர்கள் எடுத்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: நீலகிரியில் கோலாகலமாக தொடங்கிய ஹெத்தையம்மன் திருவிழா!

Intro:தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி - உற்றார், உறவினர்களுடன் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்Body:தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி - உற்றார், உறவினர்களுடன் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்

தூத்துக்குடி

உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள் இன்று புத்தாண்டு பிறப்பு திருநாள் பண்டிகையை மிக உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். கிறிஸ்தவ மக்கள் அதிகம் வசிக்கும் ஊர்களில் ஒன்றான தூத்துக்குடியில் நேற்று மாலை முதலேபுத்தாண்டு பிறப்பு கொண்டாட்டங்கள் களை கட்ட துவங்கின. புத்தாண்டு பிறப்பு திருநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள அனைத்து கிறிஸ்துவ தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. புனித பனிமய மாதா பேராலயம், திரு இருதய மேற்றிராசன ஆலயம், புனித அந்தோனியார் ஆலயம், புனித வளனார் ஆலயம் உள்ளிட்ட நகரின் அனைத்து தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றன. இரவு 11.30 மணியிலிருந்தே புத்தாடை அணிந்து குடும்பத்துடன் தேவாலயத்திற்கு வந்த கிறிஸ்துவ மக்கள் புத்தாண்டு சிறப்பு திருப்பலியில் பங்கேற்றனர். தூத்துக்குடியிலுள்ள புனித பனிமய மாதா பேராயலத்தில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு திருப்பலி  அருட்தந்தை குமார்ராஜா தலைமையில் நடைபெற்றது. திருப்பலியில் ஏராளமான கிறிஸ்துவ மக்கள் கலந்து கொண்டனர். ரோமன் கத்தோலிக்க மதத்தில் பேராலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பேராலயங்களுள் ஒன்றான தூத்துக்குடி புனித பனிமய மாதா பேராலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு திருப்பலியில் எராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மட்டுமல்லாது நெல்லை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களில் உள்ள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் தங்கள் உறவினர்களோடு இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையைக்  கொண்டாட தூத்துக்குடிக்கு வந்திருந்தனர். தேவாலயங்களில் கூட்டம் அதிகம் இருந்ததால் கடும் குளிரையும் பொருட்படுத்தாது தேவாலயத்திற்கு வெளியேயும் அமர்ந்து மக்கள் இந்த சிறப்பு திருப்பலியில் பங்கேற்றனர்.  திருப்பலி முடிந்ததும் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த அவர்கள் உலக மக்கள் அன்பில் திழைக்கவும் மகிழ்ச்சியுடனும் வாழவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.