தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேர்ந்தவர் சரவண பெருமாள் (25). இவர், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதில் நேற்று (நவ. 30) மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற சரவண பெருமாள், பின்னர் திரும்பி வரவில்லையாம்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இந்நிலையில் இன்று (டிச. 1) காலை அப்பகுதியில் சலவைத் படித்துறையில் மழைநீர் தேங்கிக் கிடந்த குட்டையில் மூழ்கி இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க...விவசாயிகள் போராட்டம்: பாஜக தலைவர் வீட்டில் ஆலோசனை