ETV Bharat / state

நல்லது செய்யவே ஆண்டவன் என்னை ஆளுநராக ஆக்கியுள்ளார் - தமிழிசை சௌந்தரராஜன் - Tuticorin Indian Trade Association

தூத்துக்குடி: நல்லது செய்யவே ஆண்டவனும், ஆண்டு கொண்டிருப்பவர்களும் தன்னை ஆளுநராக ஆக்கியுள்ளனர் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

governor
governor
author img

By

Published : Jan 13, 2020, 8:10 AM IST

தூத்துக்குடியில் இந்திய தொழில் வர்த்தக சங்கம் சார்பில், வ.உ.சி துறைமுகத்தில் சிறந்த ஏற்றுமதியாளர், துறைமுக உபயோகிப்பாளர்கள், சிறந்த துறைமுக சேவையாளர்கள், சிறந்த தொழில் முனைவோர்கள், சூப்பர் பிராண்ட் தயாரிப்பாளர் உள்ளிட்டவர்களுக்கு விருதுகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விருதுகளை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வழங்கினார்.

இவ்விழாவில் உரையாற்றிய தமிழிசை, வளம் மிக்க தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக நான் தொடர்ந்து அரசியலுக்கு அப்பாற்பட்டு நடவடிக்கை எடுப்பேன். இந்தப் பகுதியில் அதிகமாக கிடைக்கும் உப்பு, வாழை, பனை பொருட்களிலிருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்து தொழிலை மேம்படுத்தவேண்டும். இந்தப் பகுதியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

தமிழ்நாட்டிற்கும், தெலங்கானாவிற்கும் பாலமாக இருந்து நான் தொடர்ந்து பாடுபடுவேன். தெலுங்கானவிலிருந்து முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக தூத்துக்குடிக்கு எவ்வாறு கொண்டு வரவேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து வருகிறேன். நல்லது செய்யவே ஆண்டவனும், ஆண்டு கொண்டிருப்பவர்களும் என்னை ஆளுநராக ஆக்கியுள்ளனர். அதனை பயன்படுத்தி நல்லது செய்வேன் என்றார்.

இவ்விழாவில் இந்திய வியாபார தொழிற்சங்க கூட்டமைப்பைச் சார்ந்த கணபதி, இந்திய தொழில் வர்த்தக சங்கத்தின் ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பெண்களின் பாதுகாப்புக்கு தமிழிசை கூறும் அறிவுரை!

தூத்துக்குடியில் இந்திய தொழில் வர்த்தக சங்கம் சார்பில், வ.உ.சி துறைமுகத்தில் சிறந்த ஏற்றுமதியாளர், துறைமுக உபயோகிப்பாளர்கள், சிறந்த துறைமுக சேவையாளர்கள், சிறந்த தொழில் முனைவோர்கள், சூப்பர் பிராண்ட் தயாரிப்பாளர் உள்ளிட்டவர்களுக்கு விருதுகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விருதுகளை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வழங்கினார்.

இவ்விழாவில் உரையாற்றிய தமிழிசை, வளம் மிக்க தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக நான் தொடர்ந்து அரசியலுக்கு அப்பாற்பட்டு நடவடிக்கை எடுப்பேன். இந்தப் பகுதியில் அதிகமாக கிடைக்கும் உப்பு, வாழை, பனை பொருட்களிலிருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்து தொழிலை மேம்படுத்தவேண்டும். இந்தப் பகுதியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

தமிழ்நாட்டிற்கும், தெலங்கானாவிற்கும் பாலமாக இருந்து நான் தொடர்ந்து பாடுபடுவேன். தெலுங்கானவிலிருந்து முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக தூத்துக்குடிக்கு எவ்வாறு கொண்டு வரவேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து வருகிறேன். நல்லது செய்யவே ஆண்டவனும், ஆண்டு கொண்டிருப்பவர்களும் என்னை ஆளுநராக ஆக்கியுள்ளனர். அதனை பயன்படுத்தி நல்லது செய்வேன் என்றார்.

இவ்விழாவில் இந்திய வியாபார தொழிற்சங்க கூட்டமைப்பைச் சார்ந்த கணபதி, இந்திய தொழில் வர்த்தக சங்கத்தின் ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பெண்களின் பாதுகாப்புக்கு தமிழிசை கூறும் அறிவுரை!

Intro:மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக ராணுவ வீரர்களை பாதுகாக்கும் குண்டு துளைக்காத ஜாக்கெடுகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு.
Body:மத்திய அரசு மேற்கொண்ட மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக உள்நாட்டில் உற்பத்தி மேற்கொண்ட முயற்சியால் தற்போது முக்கிய தலைவர்கள் மற்றும் ராணுவ வீரர்களை பாதுகாக்கும் குண்டு துளைக்காத ஜாக்கெடுகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி துறைமுகம் வருவதற்கே காரணமாக இருந்த இந்திய தொழில் வர்த்தக சங்கம் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் சிறந்த ஏற்றுமதியாளர், துறைமுக உபயோகிப்பாளர்கள்,
சிறந்த துறைமுக சேவையாளர்கள்,சிறந்த தொழில் முனைவோர்கள், சூப்பர் பிராண்ட் தயாரிப்பாளர்களுக்கு விருதுகளை வழங்கியது. இந்த விருதுகளை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், இதனை தெரிவித்தார். இந்தியாவில் தயாரிக்கப்படும் இது உலக நாடுகள் ஏற்று கொள்ளும் அளவிற்கு தரமானதாக உள்ளது என்றார். அதற்கு காரணம் இங்குள்ள இளைஞர்கள், பெண்கள் சக்தி வாய்ந்தவர்களாக உள்ளது தான் என்றார்.

பாரத பிரதமர் ஏற்றுமதியை ஊக்கபடுத்தி வருகிறார். பால் ஊற்பத்தியில் சிறந்து விளங்கும் 15 நாடுகளில் ஒரு நாடாக இருந்த நமது நாட்டிலுள்ள பாலை வாங்க உலக நாடுகள் மறுத்த நிலையில்,பால் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக மத்திய அரசு கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு கால்நடை நோய்களை கட்டுபடுத்தியதன் காரணமாக இன்று பால் ஏற்றுமதியில் இந்தியா சிறந்து விளங்குகிறது என்றார்.

வளம் மிக்க தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு நான் தொடர்ந்து அரசியலுக்கு அப்பாற்பட்டு நடவடிக்கை எடுப்பேன் என்றார். இந்த பகுதியில் அதிகமாக கிடைக்கும் உப்பு, வாழை, பனை பொருட்களிலிருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்து தொழிலை மேம்படுத்த வேண்டும், இந்த பகுதியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளபடும் என்றார்.

ஆங்கிலேயர்களையே எதிர்த்த பாரதி, வ.உ.சிதம்பரம் போன்ற சக்தி வாய்ந்த தலைவர்கள் பிறந்த இந்த பூமியில் சக்தி அதிகமாக உள்ளது. இந்த சக்தியை பயன்படுத்தி இப்பகுதி வளரவேண்டும்.மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள நான் தமிழகத்திற்கும்-தெலுங்கானாவிற்கும் பாலமாக இருந்து தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபடுவேன். சுற்றுலாவில், தொழிலில், நீர் நிலைகளில் தமிழகத்திற்கு எப்படி உதவ முடியும் என்பதை ஆராய்ந்து வருகிறேன் என்றார்.

தெலுங்கானவிலிருந்து முதலீடுகளை தமிழகத்திற்கு குறிப்பாக தூத்துக்குடிக்கு கொண்டு வர ஆராய்ந்து கொண்டுள்ளேன் என்றார். நல்லது செய்யவே ஆண்டவனும், ஆண்டு கொண்டிருப்பவர்களும் என்னை கவர்னராக ஆக்கி உள்ளனர் அதனை பயன்படுத்தி நல்லது செய்வேன் என்றார்.

விழாவில் இந்திய வியாபார தொழிற்சங்க கூட்டமைப்பை சார்ந்த கணபதி, இந்திய தொழில் வர்த்தக சங்கத்தின் ஜாண்சன், கோடீஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.