தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவலப்பேரி பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், பைக்கில் சென்ற சவலபேரியைச் சேர்ந்த ராஜகோபால், ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
இதையடுத்து கயத்தார் காவல் துறையினர் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தை காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இச்சம்பவம் குறித்து கயத்தாறு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அரசுப் பேருந்து ஓட்டுநர் சு. சங்கரேஸ்வரனை கைது செய்தனர்.
இதையும் படிங்க: லலிதா ஜுவல்லரி முருகனிடமிருந்து மீண்டும் தங்க நகைகள் பறிமுதல்