ETV Bharat / state

விளைந்த உளுந்திற்கு விலையில்லாததால் விவசாயிகள் வேதனை; அரசு கொள்முதல் செய்ய கோரிக்கை

author img

By

Published : Jan 5, 2023, 10:34 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் சரியான மழை இல்லாத காரணத்தால் உளுந்து விளைச்சல் பாதிக்கப்பட்டநிலையில், விளைந்து உளுந்திற்கும் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதனால் உளுந்து, பாசி பருப்பினை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்மென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விளைந்த உளுந்திற்கு விலையில்லாததால் விவசாயிகள் வேதனை; அரசு கொள்முதல் செய்ய கோரிக்கை
விளைந்த உளுந்திற்கு விலையில்லாததால் விவசாயிகள் வேதனை; அரசு கொள்முதல் செய்ய கோரிக்கை
விளைந்த உளுந்திற்கு விலையில்லாததால் விவசாயிகள் வேதனை; அரசு கொள்முதல் செய்ய கோரிக்கை

தூத்துக்குடி: கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஆகிய பகுதிகளை சுற்றி மானாவாரி விவசாயம் அதிகம் நடந்து வருகிறது. வடகிழக்கு பருவமழையை நம்பித்தான் இப்பகுதி விவசாயம் இருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளாக வடகிழக்குப் பருவமழை சராசரி அளவை கடந்து பெய்ததால், விவசாயம் பெருமளவு பாதித்தது.

இந்த ஆண்டாவது போதிய மழை பெய்யும் என்ற நம்பிக்கையில், இப்பகுதி விவசாயிகள் மானாவாரியாக உளுந்து, பாசிப்பயிறு, மக்காசோளம், கம்பு போன்றவற்றை சாகுபடி செய்தனர். மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சம் ஏக்கரில் மானாவாரியாக உளுந்து பயிரிடப்பட்டன. முதலில் சில நாட்கள் பருவமழை நன்றாக பெய்ததால் உளுந்து முளைத்து வேகமாக வளரத் தொடங்கின. அதன் பிறகு மழை சரியாக பெய்யவில்லை. இதனால் பெரும்பாலான பயிர்கள் கருகிவிட்டன.

கருகியது போக மிச்சம் மீதமுள்ள பயிர்களை அறுவடை செய்யும் பணியை தற்போது விவசாயிகள் தற்போது தொடங்கியுள்ளனர். விவசாயிகள் உளுந்து பயிர்களை அறுவடை செய்து உலர வைத்து, பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விளைவித்த பயிர்களில் 20 சதவிகித மகசூல் கூட கிடைக்காததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயி கூறுகையில்,”தூத்துக்குடி, கோவில்பட்டி, எட்டையபுரம் பகுதியைச் சுற்றி 50,000 ஏக்கருக்கு மேல் மானவாரி நிலத்தில் உளுந்து, பாசிப் பயிறு போட்டுள்ளோம். கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் மழை அதிகமாக பெய்து பயிர்களை அழித்தது.

இப்போது மழை இல்லாமல் பயிர்கள் அழிந்து விட்டன. அறுவடைக்கு முன்பு ஒரு குவிண்டால் விலை 8,000 ரூபாயாக இருந்தது. தற்போது 6,000 ரூபாயாக குறைந்துவிட்டது. இருப்பினும் அதை கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வரவில்லை.

ஆகவே, டெல்டா மாவட்டங்களில் தமிழக அரசு நெல் கொள்முதலில் ஈடுபடுவது போல் தூத்துக்குடி பகுதியில் உளுந்து, பாசி பருப்புகளை கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: vandalur zoo: உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒப்பந்த ஊழியர்கள்!

விளைந்த உளுந்திற்கு விலையில்லாததால் விவசாயிகள் வேதனை; அரசு கொள்முதல் செய்ய கோரிக்கை

தூத்துக்குடி: கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஆகிய பகுதிகளை சுற்றி மானாவாரி விவசாயம் அதிகம் நடந்து வருகிறது. வடகிழக்கு பருவமழையை நம்பித்தான் இப்பகுதி விவசாயம் இருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளாக வடகிழக்குப் பருவமழை சராசரி அளவை கடந்து பெய்ததால், விவசாயம் பெருமளவு பாதித்தது.

இந்த ஆண்டாவது போதிய மழை பெய்யும் என்ற நம்பிக்கையில், இப்பகுதி விவசாயிகள் மானாவாரியாக உளுந்து, பாசிப்பயிறு, மக்காசோளம், கம்பு போன்றவற்றை சாகுபடி செய்தனர். மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சம் ஏக்கரில் மானாவாரியாக உளுந்து பயிரிடப்பட்டன. முதலில் சில நாட்கள் பருவமழை நன்றாக பெய்ததால் உளுந்து முளைத்து வேகமாக வளரத் தொடங்கின. அதன் பிறகு மழை சரியாக பெய்யவில்லை. இதனால் பெரும்பாலான பயிர்கள் கருகிவிட்டன.

கருகியது போக மிச்சம் மீதமுள்ள பயிர்களை அறுவடை செய்யும் பணியை தற்போது விவசாயிகள் தற்போது தொடங்கியுள்ளனர். விவசாயிகள் உளுந்து பயிர்களை அறுவடை செய்து உலர வைத்து, பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விளைவித்த பயிர்களில் 20 சதவிகித மகசூல் கூட கிடைக்காததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயி கூறுகையில்,”தூத்துக்குடி, கோவில்பட்டி, எட்டையபுரம் பகுதியைச் சுற்றி 50,000 ஏக்கருக்கு மேல் மானவாரி நிலத்தில் உளுந்து, பாசிப் பயிறு போட்டுள்ளோம். கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் மழை அதிகமாக பெய்து பயிர்களை அழித்தது.

இப்போது மழை இல்லாமல் பயிர்கள் அழிந்து விட்டன. அறுவடைக்கு முன்பு ஒரு குவிண்டால் விலை 8,000 ரூபாயாக இருந்தது. தற்போது 6,000 ரூபாயாக குறைந்துவிட்டது. இருப்பினும் அதை கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வரவில்லை.

ஆகவே, டெல்டா மாவட்டங்களில் தமிழக அரசு நெல் கொள்முதலில் ஈடுபடுவது போல் தூத்துக்குடி பகுதியில் உளுந்து, பாசி பருப்புகளை கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: vandalur zoo: உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒப்பந்த ஊழியர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.