ETV Bharat / state

ஆழ்துளை கிணறு: தமிழ்நாடு அரசு சொன்னதை உடனடியாக செயல்படுத்த வேண்டும்!

author img

By

Published : Oct 30, 2019, 10:45 PM IST

Updated : Oct 30, 2019, 10:53 PM IST

தூத்துக்குடி: ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றவுள்ளதாக அறிவித்த தமிழ்நாடு அரசு அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

kanimozhi

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி வந்த மக்களைவை உறுப்பினர் கனிமொழி, மூன்றாவது மைல் பகுதியில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "நாடு முழுவதும் சுஜித் காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய சிறுவனை மீட்பதற்கு அனைத்து தரப்பு அலுவலர்களும், ஊடகங்களும் சிறப்பாக செயல்பட்டனர்.

நீதிபதிகள் ஒவ்வொரு முறையும் ஒரு மரணம் தான் நாம் கடமையை செய்வதற்கு நினைவு படுத்த வேண்டுமா? என்று கேட்டுள்ளார்கள். அதனால் அதனை புரிந்து கொண்டு நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். எனவே, இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

விழிப்புணர்வோடு இருப்போம்

அரசும் இதுபோன்ற ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிக்கும் அமைப்பாக மாற்றவுள்ளதாக கூறியதை அறிவிப்போடு நிறுத்தி கொள்ளாமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும்" என்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி வந்த மக்களைவை உறுப்பினர் கனிமொழி, மூன்றாவது மைல் பகுதியில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "நாடு முழுவதும் சுஜித் காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய சிறுவனை மீட்பதற்கு அனைத்து தரப்பு அலுவலர்களும், ஊடகங்களும் சிறப்பாக செயல்பட்டனர்.

நீதிபதிகள் ஒவ்வொரு முறையும் ஒரு மரணம் தான் நாம் கடமையை செய்வதற்கு நினைவு படுத்த வேண்டுமா? என்று கேட்டுள்ளார்கள். அதனால் அதனை புரிந்து கொண்டு நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். எனவே, இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

விழிப்புணர்வோடு இருப்போம்

அரசும் இதுபோன்ற ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிக்கும் அமைப்பாக மாற்றவுள்ளதாக கூறியதை அறிவிப்போடு நிறுத்தி கொள்ளாமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும்" என்றார்.

Intro:தூத்துக்குடி: ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்ற உள்ளதாக சொன்ன அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் கனிமொழி எம்பி பேட்டி

Body:தூத்துக்குடி: ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்ற உள்ளதாக சொன்ன அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் கனிமொழி எம்பி பேட்டி அளித்தார்.

இன்று முதல் மூன்று நாட்கள் தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி வந்த பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி 3வது மைல் பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 112 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மரியாதை செலுத்தினார் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் என்னுடைய தொகுதியில் தேவர் சிலைக்கு மாலை போடும் வாய்ப்பு கிடைத்தமைக்கு பெருமைப்படுகிறேன் நாடு முழுவதும் சுர்ஜித் காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவனை மீட்பதற்கு அனைத்து தரப்பு அதிகாரிகளும் ஊடகங்களும் சிறப்பாக செயல்பட்டனர் நீதிபதிகள் ஒவ்வொரு முறையும் ஒரு மரணம் தான் நாம் கடமையை செய்வதற்கு நினைவு படுத்த வேண்டுமா என்று கேட்டுள்ளார்கள் அதனால் அதனை புரிந்து கொண்டு நாம் செயல்பட வேண்டும் அரசும் அதிகாரிகளும் வந்து சொல்வதற்கு முன்னர் நாமே முன்வந்து இதுபோன்று உயிரோடு விளையாடாமல் முன்னெச்சரிக்கையாக முயற்சி எடுத்து பாதுகாப்பாக வைத்திட வேண்டும் இனி இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றவர் அரசும் இதுபோன்ற ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிக்கும் அமைப்பாக மாற்றுவதற்கு திட்டம் உள்ளதாக கூறியுள்ளதை அறிவிப்போடு நிறுத்தி கொள்ளாமல்உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்Conclusion:
Last Updated : Oct 30, 2019, 10:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.