சசிகலா புஷ்பா வீட்டை சூறையாடிய மர்ம நபர்கள் தூத்துக்குடி: முன்னாள் தூத்துக்குடி மாநகராட்சி மேயராகவும், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்த பாஜகவின் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, தூத்துக்குடி பி&டி காலனி இல்லத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 22) மர்ம நபர்கள் சிலர், சசிகலா புஷ்பாவின் வீடு புகுந்து வீட்டை அடித்து நொறுக்கி கார் மற்றும் வீடுகளில் உள்ள கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி சத்தியராஜ் தலைமையிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை அறிந்த பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள், தற்போது சசிகலா புஷ்பா இல்லத்தில் குவிந்து வருகின்றனர். மேலும், சம்பவத்திற்கு காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பாஜக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாக் கூட்டத்தில் பேசிய சசிகலா புஷ்பா, அமைச்சர் கீதா ஜீவனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சசிகலா புஷ்பா வீடு இன்று தாக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.