ETV Bharat / state

முதலமைச்சரை விமர்சித்த முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன்!

author img

By

Published : Oct 11, 2020, 12:40 AM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை மன்னராகவும், மற்றவர்கள் தங்களை குறுநில மன்னர்களாகவும் நினைக்கின்றனர் என திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் விமர்சித்துள்ளார்.

முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன்
முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன்

தூத்துக்குடி: கடம்பூர் ராஜூ ஜாக்பாட்டில் வந்தவர் என திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தெரிவித்துள்ளார்.

விளாத்திகுளம் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து விளாத்திகுளம் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

நீண்ட காலமாக திமுக அல்லது பாஜகவில் தன்னை இணைத்து கொள்வதாக இருந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.

முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன்

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மார்க்கண்டேயன் கலந்து கொண்டார்.

இதில் பேசிய அவர், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை மன்னராக நினைத்து கொண்டும், மற்றவர்கள் தங்களை குறுநில மன்னர்களாகவும் நினைத்து கொண்டு உள்ளனர். ஆனால் மக்கள் இவர்களை கோமாளிகளாகவே பார்க்கின்றனர். கடம்பூர் ராஜு ஜாக்பாட்டில் வந்தவர். திமுக வேட்பாளர் சுப்பிரமணியத்தை ஏமாற்றி 400 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தவர் தான். வருகின்ற சட்டபேரவைத் தேர்தலில் கடம்பூர் ராஜூ தப்பித்து செல்வாரா என பார்த்து கொள்ளலாம்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் திமுகவில் இணைந்ததில் கவலையில்லை'

தூத்துக்குடி: கடம்பூர் ராஜூ ஜாக்பாட்டில் வந்தவர் என திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தெரிவித்துள்ளார்.

விளாத்திகுளம் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து விளாத்திகுளம் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

நீண்ட காலமாக திமுக அல்லது பாஜகவில் தன்னை இணைத்து கொள்வதாக இருந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.

முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன்

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மார்க்கண்டேயன் கலந்து கொண்டார்.

இதில் பேசிய அவர், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை மன்னராக நினைத்து கொண்டும், மற்றவர்கள் தங்களை குறுநில மன்னர்களாகவும் நினைத்து கொண்டு உள்ளனர். ஆனால் மக்கள் இவர்களை கோமாளிகளாகவே பார்க்கின்றனர். கடம்பூர் ராஜு ஜாக்பாட்டில் வந்தவர். திமுக வேட்பாளர் சுப்பிரமணியத்தை ஏமாற்றி 400 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தவர் தான். வருகின்ற சட்டபேரவைத் தேர்தலில் கடம்பூர் ராஜூ தப்பித்து செல்வாரா என பார்த்து கொள்ளலாம்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் திமுகவில் இணைந்ததில் கவலையில்லை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.