ETV Bharat / state

கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் வருவாய்த் துறை ஊழியர்கள் உண்ணாவிரதம்! - revenue employee protest

திருவாரூர்: கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் வருவாய்த் துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டச் செய்திகள்  வருவாய் ஊழியர்கள் உண்ணாவிரதம்  திரூவாரூர் வருவாய் ஊழியர்கள் உண்ணாவிரதம்  thiruvarur district news
கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் வருவாய் ஊழியர்கள் உண்ணாவிரதம்
author img

By

Published : Aug 5, 2020, 4:37 PM IST

கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்கள் கரோனாவால் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் வழங்கவேண்டும் என தமிழ்நாடு வருவாய்த் துறை ஊழியர்கள் சங்கத்தினர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வருவாய்த் துறை ஊழியர்கள்

மேலும், தொற்றால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டால், உயர் தரமான சிகிச்சை அளிப்பதோடு, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைப்படி கருணைத் தொகை 2 லட்சம் ரூபாயை வழங்கிடவேண்டும், நோய்த் தடுப்பு பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து அலுவலர்களும் உயர்தர தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அச்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாத பயிர் காப்பீட்டுத் தொகை: வேதனையில் விவசாயிகள்!

கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்கள் கரோனாவால் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் வழங்கவேண்டும் என தமிழ்நாடு வருவாய்த் துறை ஊழியர்கள் சங்கத்தினர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வருவாய்த் துறை ஊழியர்கள்

மேலும், தொற்றால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டால், உயர் தரமான சிகிச்சை அளிப்பதோடு, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைப்படி கருணைத் தொகை 2 லட்சம் ரூபாயை வழங்கிடவேண்டும், நோய்த் தடுப்பு பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து அலுவலர்களும் உயர்தர தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அச்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாத பயிர் காப்பீட்டுத் தொகை: வேதனையில் விவசாயிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.