ETV Bharat / state

திமுக நிர்வாகியின் வீட்டுக்குத் தீ வைப்பு - தேர்தல் முன்விரோதம் காரணமா? - Thiruvarur House Burning

திருவாரூர் : திருத்துறைப்பூண்டி அருகே முன்விரோதம் காரணமாக திமுக நிர்வாகியின் வீட்டில் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் தேர்தல் முன்விரோதம் திருத்துறைப்பூண்டி வீடு எரிப்பு திருவாரூர் வீடு எரிப்பு Thiruthuraipoondi House Fire Thiruvarur House Burning Thiruvarur Election Issue House Fire
Thiruthuraipoondi House Fire
author img

By

Published : Jan 18, 2020, 10:02 AM IST

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள திருவலஞ்சுழி கிராமத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் வீரமணி. இந்நிலையில், நேற்று அதிகாலை வீரமணியும் அவரது மனைவியும் தூங்கிக்கொண்டிருக்கும்போது வீட்டின் மேற்பகுதி கூரை எரிந்து கீழே விழுந்துள்ளது.

இதனை அறிந்த வீரமணி உடனடியாக வீட்டை விட்டு வெளியே சென்றபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் தப்பியோடி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் ஒன்றுதிரண்டு வீட்டின் கூரை மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

தீ விபத்து காரணமாக வீட்டிலிருந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் சேதமடைந்துள்ளன. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை காவல் துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக இச்செயல் நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இளைஞரை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள திருவலஞ்சுழி கிராமத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் வீரமணி. இந்நிலையில், நேற்று அதிகாலை வீரமணியும் அவரது மனைவியும் தூங்கிக்கொண்டிருக்கும்போது வீட்டின் மேற்பகுதி கூரை எரிந்து கீழே விழுந்துள்ளது.

இதனை அறிந்த வீரமணி உடனடியாக வீட்டை விட்டு வெளியே சென்றபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் தப்பியோடி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் ஒன்றுதிரண்டு வீட்டின் கூரை மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

தீ விபத்து காரணமாக வீட்டிலிருந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் சேதமடைந்துள்ளன. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை காவல் துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக இச்செயல் நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இளைஞரை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு!

Intro:Body:
திருத்துறைப்பூண்டி அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக திமுக நிர்வாகியின் வீட்டை தீ வைத்ததால் பரபரப்பு. சம்பவம் குறித்து ஆலிவலம் போலீசார் விசாரணை.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே திருவலஞ்சுழி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவர் கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை வீரமணி மற்றும் அவரது மனைவி தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டின் மேற்பகுதி கூரை எரிந்து விழுந்து உள்ளது .இதனை அறிந்த வீரமணி உடனடியாக வெளியே தப்பி ஓடி விட்டனர் .அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் தப்பி ஓடி உள்ளனர். இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஒன்றுதிரண்டு வீட்டின் கூரை மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இத் தீ விபத்து காரணமாக வீட்டில் இருந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் சேதம் அடைந்தது இச்சம்பவம் குறித்து தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக நடைபெற்று இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.