ETV Bharat / state

நாற்று நடவு செய்த பள்ளி மாணவ. மாணவிகள்!

author img

By

Published : Nov 1, 2019, 10:17 AM IST

திருவாரூர்: 'நெல் ஜெயராமன்' விதைப் பண்ணையில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பாரம்பரிய நெல் நாற்றுகளை நட்டு விழிப்புணர்வு பயிற்சி மேற்கொண்டனர்.

paddy

திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் கிராமத்தைச் சேர்ந்த மறைந்த நெல் ஜெயராமன் அழிவின் விளிம்பிலிருந்த நம் பாரம்பரிய நெல் ரகங்களில் 174 ரகங்களை மீட்டெடுத்து ஆண்டுதோறும் பாரம்பரிய நெல் திருவிழா மூலம் அனைத்து மாநில விவசாயிகளிடத்திலும் கொண்டுசேர்த்தவர்.

விவசாயிகளிடம் மட்டும் இல்லாமல் மாணவர்களிடமும் பாரம்பரிய நெல் விதைகளின் முக்கியத்துவத்தை கொண்டுசேர்க்கும் வகையில் அவருடைய விதைப்பண்ணையில் ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளுக்கு நாற்று நடுவது, களை பறிப்பது, பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது வழக்கமாக இருந்துவந்தது.

அவருடைய மறைவை அடுத்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அவருடைய குடும்பத்தார்கள் முன்னின்று நடத்தினார்கள் இதில் மாணவ, மாணவிகளுக்கு நாற்று நடுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண் கல்லூரி மாணவ - மாணவிகள் நெல் ஜெயராமனின் இயற்கை விதைப் பண்ணையில் பாரம்பரிய நெல் ரகமான ’கருப்பு கவுனி’ நாற்றை நட்டு பயிற்சிபெற்றனர்.

நாற்று நடவு செய்த மாணவர்கள்

முன்னதாகப் பயிரிடப்பட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள், அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்தும் மாணவ - மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்தப் பயிற்சியில் இயற்கை விவசாயம் குறித்து நேரடியாக அறிந்துகொண்டது விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'நாங்கெல்லாம் இருக்குற வர விவசாயம் சாகாது' - நாற்று நடவு செய்த மாணவர்கள்..!

திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் கிராமத்தைச் சேர்ந்த மறைந்த நெல் ஜெயராமன் அழிவின் விளிம்பிலிருந்த நம் பாரம்பரிய நெல் ரகங்களில் 174 ரகங்களை மீட்டெடுத்து ஆண்டுதோறும் பாரம்பரிய நெல் திருவிழா மூலம் அனைத்து மாநில விவசாயிகளிடத்திலும் கொண்டுசேர்த்தவர்.

விவசாயிகளிடம் மட்டும் இல்லாமல் மாணவர்களிடமும் பாரம்பரிய நெல் விதைகளின் முக்கியத்துவத்தை கொண்டுசேர்க்கும் வகையில் அவருடைய விதைப்பண்ணையில் ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளுக்கு நாற்று நடுவது, களை பறிப்பது, பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது வழக்கமாக இருந்துவந்தது.

அவருடைய மறைவை அடுத்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அவருடைய குடும்பத்தார்கள் முன்னின்று நடத்தினார்கள் இதில் மாணவ, மாணவிகளுக்கு நாற்று நடுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண் கல்லூரி மாணவ - மாணவிகள் நெல் ஜெயராமனின் இயற்கை விதைப் பண்ணையில் பாரம்பரிய நெல் ரகமான ’கருப்பு கவுனி’ நாற்றை நட்டு பயிற்சிபெற்றனர்.

நாற்று நடவு செய்த மாணவர்கள்

முன்னதாகப் பயிரிடப்பட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள், அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்தும் மாணவ - மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்தப் பயிற்சியில் இயற்கை விவசாயம் குறித்து நேரடியாக அறிந்துகொண்டது விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'நாங்கெல்லாம் இருக்குற வர விவசாயம் சாகாது' - நாற்று நடவு செய்த மாணவர்கள்..!

Intro:Body:
திருத்துறைப்பூண்டி அருகே நெல் ஜெயராமன் விதைப் பண்ணையில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பாரம்பரிய நெல் நாற்றுகளை நட்டு விழிப்புணர்வு பயிற்சி மேற்கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் கிராமத்தை சேர்ந்த நெல் ஜெயராமன் அழிவின் விளிம்பில் இருந்த நம் பாரம்பரிய நெல் ரகங்களில் 174 ரகங்களை மீட்டெடுத்து ஆண்டுதோறும் பாரம்பரிய நெல் திருவிழா மூலம் அனைத்து மாநில விவசாயிகளிடத்திலும் அதனை கொண்டு சென்றார். விவசாயிகளிடம் மட்டும் இல்லாமல் மாணவர்களிடமும் பாரம்பரிய நெல் விதைகளின் முக்கியத்துவத்தை அறியும் வகையில்
அவருடைய விதைபண்ணையில் ஆண்டுதோறும் மாணவ-மாணவிகளுக்கு நாற்று நடுவது, களை பறிப்பது மற்றும் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அவருடைய மறைவை அடுத்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு இடர்பாடு ஏற்படாத வண்ணம் அவருடைய குடும்பத்தார்கள் மாணவ-மாணவிகளுக்கு நாற்று நடுவது குறித்து பயிற்சி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண் கல்லூரி மாணவ மாணவிகள் இன்று நெல் ஜெயராமன் அவர்களின் இயற்கை விதைப் பண்ணையில் பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி நாற்றை நட்டனர். முன்னதாக பயிரிடப்பட்டிருந்த 25க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள், அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்தும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்த பயிற்சியில் நாற்று நடுவது, உழவுப்பணி, இயற்கை விவசாயம் குறித்து நேரடியாக அறிந்துகொண்டது விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

பேட்டி.
கீர்த்தனா - மாணவி
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.