ETV Bharat / state

ஜோதிடத்தின் நம்பிக்கையால் 5 வயது மகனை கொன்ற தந்தை!

author img

By

Published : Mar 3, 2021, 9:23 AM IST

திருவாரூர்: நன்னிலம் அருகே ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையால் தனது 5 வயது மகனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற தந்தையை காவலர்கள் கைதுசெய்தனர்.

5 வயது மகனை கொன்ற தந்தை கைது  ஜோதிடத்தின் நம்பிக்கையால் 5 வயது மகனை கொன்ற தந்தை கைது  திருவாரூரில் 5 வயது மகனை கொன்ற தந்தை கைது  நன்னிலத்தில் ஜோதிடத்தின் நம்பிக்கையால் 5 வயது மகனை கொன்ற தந்தை கைது  Father arrested for killing 5 year old son  Father arrested for killing 5-year-old son in astrology  Father arrested for killing 5-year-old son in Nannilam  Father arrested for killing 5-year-old son in Thiruvarur
Father arrested for killing 5-year-old son in Nannilam

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராம்கி (29). இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் சாய்சரண் (5) என்ற மகனும் சர்வேஷ் என்ற மூன்று மாத கைக்குழந்தையும் உள்ளனர். ஓட்டுநரான ராம்கி ஜோதிட விவகாரத்தில் அதிகம் நம்பிக்கை கொண்டவராக இருந்து வந்தார்.

இதனால், பல்வேறு ஜோதிடர்களை அவர் சந்தித்து தனது வாழ்வில் முன்னேற்றம் அடைய என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு ஒரு ஜோதிடர் ராம்கியின் மூத்த மகன் சாய்சரண் இருக்கும் வரை அவருக்கு வாழ்வில் முன்னேற்றம் இருக்காது என்று கூறியுள்ளார். இதனை நம்பிய அவர் மூத்த மகன் சாய் சரணை 15 ஆண்டுகள் விடுதியில் தங்க வைக்கப் போவதாக காயத்ரியிடம் தெரிவித்துள்ளார்.

இதனால், கணவன் மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (மார்ச்2) மது போதையில் வீட்டுக்கு வந்த ராம்கி மூத்த மகன் சாய்சரணை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் எனக் கூறி மனைவி காயத்ரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அருகிலிருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து சாய்சரண் மீது மண்ணெண்ணையை ஊற்றி பற்ற வைத்துள்ளார்.

5 வயது மகனை கொன்ற தந்தை கைது  ஜோதிடத்தின் நம்பிக்கையால் 5 வயது மகனை கொன்ற தந்தை கைது  திருவாரூரில் 5 வயது மகனை கொன்ற தந்தை கைது  நன்னிலத்தில் ஜோதிடத்தின் நம்பிக்கையால் 5 வயது மகனை கொன்ற தந்தை கைது  Father arrested for killing 5 year old son  Father arrested for killing 5-year-old son in astrology  Father arrested for killing 5-year-old son in Nannilam  Father arrested for killing 5-year-old son in Thiruvarur
உயிரிழந்த 5 வயது சிறுவன் சாய்சரண்

இந்தத் தீயில் கருகி சாய்சரண் துடிதுடித்தார். இதைப் பார்த்து காயத்ரி அலறல் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சாய்சரணை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால், 90 விழுக்காடு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாய்சரண், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (மார்ச்3) உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் தந்தை ராம்கியை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராம்கி (29). இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் சாய்சரண் (5) என்ற மகனும் சர்வேஷ் என்ற மூன்று மாத கைக்குழந்தையும் உள்ளனர். ஓட்டுநரான ராம்கி ஜோதிட விவகாரத்தில் அதிகம் நம்பிக்கை கொண்டவராக இருந்து வந்தார்.

இதனால், பல்வேறு ஜோதிடர்களை அவர் சந்தித்து தனது வாழ்வில் முன்னேற்றம் அடைய என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு ஒரு ஜோதிடர் ராம்கியின் மூத்த மகன் சாய்சரண் இருக்கும் வரை அவருக்கு வாழ்வில் முன்னேற்றம் இருக்காது என்று கூறியுள்ளார். இதனை நம்பிய அவர் மூத்த மகன் சாய் சரணை 15 ஆண்டுகள் விடுதியில் தங்க வைக்கப் போவதாக காயத்ரியிடம் தெரிவித்துள்ளார்.

இதனால், கணவன் மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (மார்ச்2) மது போதையில் வீட்டுக்கு வந்த ராம்கி மூத்த மகன் சாய்சரணை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் எனக் கூறி மனைவி காயத்ரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அருகிலிருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து சாய்சரண் மீது மண்ணெண்ணையை ஊற்றி பற்ற வைத்துள்ளார்.

5 வயது மகனை கொன்ற தந்தை கைது  ஜோதிடத்தின் நம்பிக்கையால் 5 வயது மகனை கொன்ற தந்தை கைது  திருவாரூரில் 5 வயது மகனை கொன்ற தந்தை கைது  நன்னிலத்தில் ஜோதிடத்தின் நம்பிக்கையால் 5 வயது மகனை கொன்ற தந்தை கைது  Father arrested for killing 5 year old son  Father arrested for killing 5-year-old son in astrology  Father arrested for killing 5-year-old son in Nannilam  Father arrested for killing 5-year-old son in Thiruvarur
உயிரிழந்த 5 வயது சிறுவன் சாய்சரண்

இந்தத் தீயில் கருகி சாய்சரண் துடிதுடித்தார். இதைப் பார்த்து காயத்ரி அலறல் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சாய்சரணை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால், 90 விழுக்காடு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாய்சரண், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (மார்ச்3) உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் தந்தை ராம்கியை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.