திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராம்கி (29). இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் சாய்சரண் (5) என்ற மகனும் சர்வேஷ் என்ற மூன்று மாத கைக்குழந்தையும் உள்ளனர். ஓட்டுநரான ராம்கி ஜோதிட விவகாரத்தில் அதிகம் நம்பிக்கை கொண்டவராக இருந்து வந்தார்.
இதனால், பல்வேறு ஜோதிடர்களை அவர் சந்தித்து தனது வாழ்வில் முன்னேற்றம் அடைய என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு ஒரு ஜோதிடர் ராம்கியின் மூத்த மகன் சாய்சரண் இருக்கும் வரை அவருக்கு வாழ்வில் முன்னேற்றம் இருக்காது என்று கூறியுள்ளார். இதனை நம்பிய அவர் மூத்த மகன் சாய் சரணை 15 ஆண்டுகள் விடுதியில் தங்க வைக்கப் போவதாக காயத்ரியிடம் தெரிவித்துள்ளார்.
இதனால், கணவன் மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (மார்ச்2) மது போதையில் வீட்டுக்கு வந்த ராம்கி மூத்த மகன் சாய்சரணை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் எனக் கூறி மனைவி காயத்ரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அருகிலிருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து சாய்சரண் மீது மண்ணெண்ணையை ஊற்றி பற்ற வைத்துள்ளார்.
![5 வயது மகனை கொன்ற தந்தை கைது ஜோதிடத்தின் நம்பிக்கையால் 5 வயது மகனை கொன்ற தந்தை கைது திருவாரூரில் 5 வயது மகனை கொன்ற தந்தை கைது நன்னிலத்தில் ஜோதிடத்தின் நம்பிக்கையால் 5 வயது மகனை கொன்ற தந்தை கைது Father arrested for killing 5 year old son Father arrested for killing 5-year-old son in astrology Father arrested for killing 5-year-old son in Nannilam Father arrested for killing 5-year-old son in Thiruvarur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10847760_tvr1.jpg)