ETV Bharat / state

மூடாத நிலையில் 40 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணறு - திருவாரூரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணறு

திருவாரூர் : மன்னார்குடி அருகே 40 ஆண்டுகளுக்கு முன்பு கனிமவளத் துறை சார்பில் 1500 அடி ஆழம் தோண்டப்பட்ட கிணற்றை உடனடியாக மூடுவற்கு ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் கோாிக்கை விடுத்துள்ளார்.

bore well
author img

By

Published : Oct 30, 2019, 4:56 PM IST

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் இறப்புக்கு பிறகு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அசேஷம் கிராமத்தில் மத்திய அரசின் கணிமவளத் துறை சார்பில் 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள், பொங்கு நீரூற்று என்ற பெயரில் மூடப்படாமல் ஒரு மீட்டர் அகலத்தில் 1500 அடி ஆழத்தில் உள்ளது.

இந்த கிணற்றை தற்காலிகமாக நேற்று செங்கல் வைத்து மூடியும் நான்கு புறமும் கயிற்றால் கட்டப்பட்டது. இந்தக் கிணறு அருகில் தனியாருக்குச் சொந்தமான பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.

மூடாத நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறு

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டுள்ள பயனற்ற ஆழ்குழாய்க் கிணறுகள் பல்வேறு கிராமங்களில் உள்ளன. அவற்றை உடனடியாக மூட வேண்டும். அதுபோல எங்கள் கிராமத்தில் கனிமவளத் துறை சார்பில் தோண்டப்பட்டு பயனற்ற நிலையில் உள்ள 1500 அடி குழியை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேன்டும் என்றனர்.

இதையும் படிங்க : ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்ட இடத்தில் ஆட்சியர் ஆய்வு!

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் இறப்புக்கு பிறகு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அசேஷம் கிராமத்தில் மத்திய அரசின் கணிமவளத் துறை சார்பில் 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள், பொங்கு நீரூற்று என்ற பெயரில் மூடப்படாமல் ஒரு மீட்டர் அகலத்தில் 1500 அடி ஆழத்தில் உள்ளது.

இந்த கிணற்றை தற்காலிகமாக நேற்று செங்கல் வைத்து மூடியும் நான்கு புறமும் கயிற்றால் கட்டப்பட்டது. இந்தக் கிணறு அருகில் தனியாருக்குச் சொந்தமான பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.

மூடாத நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறு

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டுள்ள பயனற்ற ஆழ்குழாய்க் கிணறுகள் பல்வேறு கிராமங்களில் உள்ளன. அவற்றை உடனடியாக மூட வேண்டும். அதுபோல எங்கள் கிராமத்தில் கனிமவளத் துறை சார்பில் தோண்டப்பட்டு பயனற்ற நிலையில் உள்ள 1500 அடி குழியை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேன்டும் என்றனர்.

இதையும் படிங்க : ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்ட இடத்தில் ஆட்சியர் ஆய்வு!

Intro:Body:மன்னார்குடி அருகே 40 ஆண்டுகளுக்கு முன்பு கனிமவளத்துறை சார்பில் 1500 அடி ஆழமுள்ள தோண்டப்பட்ட கிணறு இன்று வரை மூடப்படவில்லை அதனை உடனடியாக மூடுவற்கு உாிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோாிக்கை.

கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டி கிராமத்தில் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சுஜீத்வில்சன் என்கிற இரண்டு வயது குழந்தை பிணமாக மீட்கப்பட்டான். இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் பயனற்ற ஆழ்குழாய் கிணறுகளை முறையாக மூட வேண்டும் என தமிழக அரசு சார்பில் உத்தரவிட்டனர்.
அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அசேஷம் மரவக்காடு கிராமத்தில் மத்திய அரசின் கணிமவளத்துறை சார்பில் 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கிணறுகள் ஆர்ட்டீசியன் ஊற்று என்றப் பெயரில் மூடப்படாமல் ஒரு மீட்டர் அகலத்தில் 1500 அடி ஆழத்தில் தரைக்கிணறாகவே உள்ளது . இந்த கிணற்றை தற்காலிகமாக நேற்று அவசர அவசரமாக செங்கல் வைத்து மூடியும் நான்கு புறமும் கயிற்றால் கட்டி வைத்து சென்றுள்ளனர் . இந்த கிணறு அருகில் தனியார்க்கு சொந்தமான பள்ளிகூடம் உள்ளது .

திருவாரூர் மாவட்டத்தில் ஒன்சிஜி நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டுள்ள பயனற்ற ஆழ்குழாய் கிணறுகள் பல்வேறு கிராமங்களில் உள்ளது. கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் அதுபோல எங்கள் கிராமத்தில் கனிமவளத்துறை சார்பில் தோண்டப்பட்டு பயனற்ற 1500 அடி உள்ள குழியை மூடவில்லை. உடனடியாக மாவட்ட ஆட்சியர் இந்த பள்ளத்தை மூடுவதற்கான உாிய நடவடிக்கை எடுக்க வேன்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.