ETV Bharat / state

தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊர் திரும்பிய 70 பேர்

author img

By

Published : Mar 20, 2020, 11:56 PM IST

திருவாரூர்: வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊர் திரும்பிய 70க்கும் மேற்பட்டோரை அவரவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் குழுவினரின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர் மருத்துவ கண்காணிப்பு
தொடர் மருத்துவ கண்காணிப்பு

கரோனா வைரஸ் பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதனால் மாநிலத்திலுள்ள திரையரங்குகள், சுற்றுலாத் தலங்கள், பூங்காக்கள், மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவை மார்ச் 31ஆம் தேதி வரை மூடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரசுகன் என்பவர் பத்து நாள்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்து வீடு திரும்பியுள்ளார். பின்னர் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர் மருத்துவக் கண்காணிப்பு

அதேபோல திருவாரூர் மாவட்டம் ஆதிச்சபுரத்தைச் சேர்ந்த நபர் சிங்கப்பூரிலிருந்து கடந்த 10 தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவருக்கு திடீர் காய்ச்சல், இருமல் ஏற்படவே அவரும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றார். தற்போது மருத்துவர்கள் அவரது ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 70க்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊர் திரும்பி உள்ள நிலையில், அனைவரும் அவரவர் வீட்டிலேயே வைக்கப்பட்டு மருத்துவக் குழுவினரின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா: மக்களைக் காக்க மிருத்தியுஞ்சய மகா யாகம்

கரோனா வைரஸ் பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதனால் மாநிலத்திலுள்ள திரையரங்குகள், சுற்றுலாத் தலங்கள், பூங்காக்கள், மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவை மார்ச் 31ஆம் தேதி வரை மூடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரசுகன் என்பவர் பத்து நாள்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்து வீடு திரும்பியுள்ளார். பின்னர் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர் மருத்துவக் கண்காணிப்பு

அதேபோல திருவாரூர் மாவட்டம் ஆதிச்சபுரத்தைச் சேர்ந்த நபர் சிங்கப்பூரிலிருந்து கடந்த 10 தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவருக்கு திடீர் காய்ச்சல், இருமல் ஏற்படவே அவரும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றார். தற்போது மருத்துவர்கள் அவரது ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 70க்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊர் திரும்பி உள்ள நிலையில், அனைவரும் அவரவர் வீட்டிலேயே வைக்கப்பட்டு மருத்துவக் குழுவினரின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா: மக்களைக் காக்க மிருத்தியுஞ்சய மகா யாகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.