ETV Bharat / state

தேசிய கைதறி தினம்: நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர் - welfare assistance for handloomers

திருவண்ணாமலை: ஐந்தாவது தேசிய கைத்தறி தினவிழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, நெசவாளர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

handloom
author img

By

Published : Aug 8, 2019, 3:23 AM IST

கைத்தறி நெசவாளர்களின் தொழிலை மேம்படுத்தவும், வருவாயை உயர்த்தவும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ஐந்தாவது தேசிய கைத்தறி தினவிழாவான நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நெசவாளர்ககுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்படி முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 10 நெசவாளர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கினார். மேலும் இந்த விழாவில் இரண்டு நெசவாளர்களுக்கு தார் சுத்தம் செய்யும் இயந்திரம் வழங்கப்பட்டன. இது தவிர ஐந்து பெண் நெசவாளர்கள், மூன்று மூத்த குடி நெசவாளர்கள் மற்றும் இரண்டு மாற்றுத்திறனாளி நெசவாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

handloom
நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

அதைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், கைத்தறி நெசவாளர்களின் வளர்ச்சிக்காகவும், உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக கடன் உதவிகள், மானியத்துடன் உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கைத்தறி நெசவுத் தொழில் முதன்மைத் தொழிலாக காணப்படுகிறது. உலக அளவில் ஆரணி பட்டு ரகங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதால் நல்ல விலைக்கு விற்கப்பட்டு வருகிறது என்றார்.

கைத்தறி நெசவாளர்களின் தொழிலை மேம்படுத்தவும், வருவாயை உயர்த்தவும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ஐந்தாவது தேசிய கைத்தறி தினவிழாவான நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நெசவாளர்ககுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்படி முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 10 நெசவாளர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கினார். மேலும் இந்த விழாவில் இரண்டு நெசவாளர்களுக்கு தார் சுத்தம் செய்யும் இயந்திரம் வழங்கப்பட்டன. இது தவிர ஐந்து பெண் நெசவாளர்கள், மூன்று மூத்த குடி நெசவாளர்கள் மற்றும் இரண்டு மாற்றுத்திறனாளி நெசவாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

handloom
நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

அதைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், கைத்தறி நெசவாளர்களின் வளர்ச்சிக்காகவும், உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக கடன் உதவிகள், மானியத்துடன் உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கைத்தறி நெசவுத் தொழில் முதன்மைத் தொழிலாக காணப்படுகிறது. உலக அளவில் ஆரணி பட்டு ரகங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதால் நல்ல விலைக்கு விற்கப்பட்டு வருகிறது என்றார்.

Intro:திருவண்ணாமலையில் ஐந்தாவது தேசிய கைத்தறி தினவிழாவை ஒட்டி நெசவாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி வழங்கினார்.Body:திருவண்ணாமலையில் ஐந்தாவது தேசிய கைத்தறி தினவிழாவை ஒட்டி நெசவாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி வழங்கினார்.

ஐந்தாவது தேசிய கைத்தறி தின விழாவில் 10 நெசவாளர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

தார் சுத்தம் செய்யும் இயந்திரம் இரண்டு நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் ஐந்து பெண் நெசவாளர்கள் மற்றும் 3 மூத்த குடி நெசவாளர்கள் மற்றும் இரண்டு மாற்றுத்திறனாளி நெசவாளர்களுக்கு பரிசுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

கடன் உதவி மற்றும் பரிசுகளை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியபோது கூறியதாவது,

கைத்தறி நெசவாளர்கள் மற்றும் குடும்பத்தினரின் தொழிலை மேம்படுத்தவும் , வருவாயை உயர்த்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ஆம் நாளை தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கைத்தறி நெசவாளர்களின் வளர்ச்சிக்காகவும், உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கடன் உதவிகள், மானியத்துடன் உபகரணங்கள் வழங்கி வருகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கைத்தறி நெசவுத் தொழில் முதன்மைத் தொழிலாக காணப்படுகிறது.

உலக அளவில் ஆரணி பட்டு ரகங்களுக்கு அதிக மரியாதை உள்ளதால் நல்ல விலைக்கு விற்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தெரிவித்தார்.Conclusion:திருவண்ணாமலையில் ஐந்தாவது தேசிய கைத்தறி தினவிழாவை ஒட்டி நெசவாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி வழங்கினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.