ETV Bharat / state

40 ஆண்டுகளாக தூர்வாராமல் இருந்த ஏரியை புதுப்பித்த இளைஞர்கள்!

author img

By

Published : Aug 1, 2019, 3:02 AM IST

திருவண்ணாமலை: சேத்துப்பட்டு ஒன்றியம் மண்டகொளத்தூர் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேல் தூர்வாராமல் இருந்த குளத்தை இளைஞர்கள் தாமாக முன்வந்து தூர்வாரினர்.

40 ஆண்டுகளுக்கு மேல் தூர்வாராமல் இருந்த ஏரியை தூர்வாரிய இளைஞர்கள்!

திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலுள்ள சேத்துப்பட்டு ஒன்றியம் மண்டகொளத்தூர் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேல் தூர்வாராமல் இருந்த குளத்தை, தூர்வாரி பராமரிக்க அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து 'மண்டகொளத்தூர் மக்கள் மன்றம்' என்ற அமைப்பை தொடங்கினர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர், அனுமதி பெற்று சட்டப்படி தூர்வாரும் பணி தொடங்கிய போது, அக்குளத்திற்கு அருகில் நிலம் வைத்துள்ளவர்கள் தூர்வாரும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி துறைக்கு கோரிக்கை வைத்த இளைஞர்கள். காவல் துறையினரின் உதவியுடன் இந்த பணி தொடங்கி முடிந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறுகையில்,

ஏரியை தூர்வார அனுமதியளித்து ஒத்துழைப்பு கொடுத்த மாவட்ட ஆட்சி நிர்வாகத்திற்கும், சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், வருவாய்துறை அதிகாரி அவர்களுக்கும், கிராம நிர்வாக அதிகாரி அவர்களுக்கும் மண்டகொளத்தூர் மக்கள் மன்றம் சார்பில் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் அந்த குளத்தின் கரையோரங்களில் மரங்களை நட்டு பராமரிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.

இளைஞர்களின் இந்த செயலுக்கு பொதுமக்கள் தங்களின் பாராட்டுகளை தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலுள்ள சேத்துப்பட்டு ஒன்றியம் மண்டகொளத்தூர் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேல் தூர்வாராமல் இருந்த குளத்தை, தூர்வாரி பராமரிக்க அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து 'மண்டகொளத்தூர் மக்கள் மன்றம்' என்ற அமைப்பை தொடங்கினர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர், அனுமதி பெற்று சட்டப்படி தூர்வாரும் பணி தொடங்கிய போது, அக்குளத்திற்கு அருகில் நிலம் வைத்துள்ளவர்கள் தூர்வாரும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி துறைக்கு கோரிக்கை வைத்த இளைஞர்கள். காவல் துறையினரின் உதவியுடன் இந்த பணி தொடங்கி முடிந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறுகையில்,

ஏரியை தூர்வார அனுமதியளித்து ஒத்துழைப்பு கொடுத்த மாவட்ட ஆட்சி நிர்வாகத்திற்கும், சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், வருவாய்துறை அதிகாரி அவர்களுக்கும், கிராம நிர்வாக அதிகாரி அவர்களுக்கும் மண்டகொளத்தூர் மக்கள் மன்றம் சார்பில் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் அந்த குளத்தின் கரையோரங்களில் மரங்களை நட்டு பராமரிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.

இளைஞர்களின் இந்த செயலுக்கு பொதுமக்கள் தங்களின் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Intro:திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம்
சேத்துப்பட்டு ஒன்றியம் மண்டகொளத்தூர் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேல் தூர்வாராமல் இருந்த சிறப்பு வாய்ந்த குளம் இளைஞர்களின் விடாமுயற்சியால் தூர்வாரப்பட்டது.Body:திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம்
சேத்துப்பட்டு ஒன்றியம் மண்டகொளத்தூர் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேல் தூர்வாராமல் இருந்த சிறப்பு வாய்ந்த குளம் இளைஞர்களின் விடாமுயற்சியால் தூர்வாரப்பட்டது.

முதலில் இந்த குளத்தை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்று மண்டகொளத்தூரில் உள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து மண்டகொளத்தூர் மக்கள் மன்றம் என்ற அமைப்பை தொடங்கி இதன் மூலம் இந்த குளத்தை சுத்தம் செய்து தூர்வாரி பராமரிக்க முடிவு செய்தனர்.

அதன் அடிப்படையில் தாமரைக் குளம் தூர்வாரப்பட்டது.

முன்னதாக இந்தப் பணியை தொடங்கும் போதெல்லாம் அந்த குளத்திற்கு அருகாமையில் உள்ள நிலம் வைத்துள்ளவர்கள் இந்த தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தி வந்துள்ளனர்.

அதன் பிறகு மாவட்ட ஆட்சியரிடம் முறையாக அனுமதி பெற்று அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் தூர்வாரும் பணியை தொடங்கினர்.

மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்த பிறகும் கூட தூர்வாரும் பணி தொடங்கியபோது அங்கு நிலம் வைத்துள்ளவர்கள் இந்த பணியை தடுத்து நிறுத்தினர்.

எனவே சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களை தொடர்பு கொண்டு பேசி அவர்களை வரவைத்தும், வருவாய் அலுவலர் அவர்களை வரவைத்தும், கிராம நிர்வாக அலுவலர் அவர்களை வரவழைத்த பிறகும் அந்த நபர்களிடம் பேச்சுவார்த்தை செய்தும் அவர்கள் ஏற்றுக் கொள்வதாக தெரியவில்லை.

காவல்துறையினர் வந்து தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பிறகு தான் இந்த பணி தொடங்கி முடிந்தது.

இப்போது அந்த குளம் அழகாக காட்சியளிக்கிறது. இது மட்டுமல்லாமல் இதை தொடர்ந்து அந்த குளக்கரைகளில் தமிழ்நாட்டில் தேசிய மரமான பனை மரத்தையும், வேப்ப மரம் போன்ற பயன்தரும் மரங்களை நட இந்த மக்கள் மன்றம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

முழு ஒத்துழைப்பு அளித்த மாவட்ட ஆட்சி நிர்வாகத்திற்கும், சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், வருவாய்துறை அதிகாரி அம்மா அவர்களுக்கும், கிராம நிர்வாக அதிகாரி அவர்களுக்கும் மக்கள் மன்றம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.Conclusion:திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம்
சேத்துப்பட்டு ஒன்றியம் மண்டகொளத்தூர் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேல் தூர்வாராமல் இருந்த சிறப்பு வாய்ந்த குளம் இளைஞர்களின் விடாமுயற்சியால் தூர்வாரப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.