ETV Bharat / state

திருவண்ணாமலையில் 8000ஐ நெருங்கும் கரோனா

author img

By

Published : Aug 10, 2020, 6:44 PM IST

திருவண்ணாமலை : மாவட்டத்தில் இன்று (ஆக. 10) ஒரே நாளில் 154 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து,  கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாயிரத்து 832ஆக அதிகரித்துள்ளது.

thiruvannamalai likely reach to 8000 corona positive cases
thiruvannamalai likely reach to 8000 corona positive cases

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாயிரத்து 832ஆக இருந்தது. இன்று புதிதாக 154 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாவட்டம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாயிரத்து 986ஆக உயர்ந்துள்ளது.

நேற்று வரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஐந்தாயிரத்து 806 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், சிகிச்சைப் பலனின்றி 89 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை மற்றும் ஜம்மு-காஷ்மீரில் இருந்து வந்த தலா ஒருவர், புறநோயாளிகள் பிரிவில் இருந்த 64 பேர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 56 பேர், இரண்டாம் நிலை நோய்த்தொற்றுடைய 12 பேர், முன் களப்பணியாளர்கள் முன்று பேர், பிற மாவட்டங்களில் இருந்து அனுப்பப்பட்ட 17 பேர் உள்ளிட்ட 154 பேருக்கு இன்று கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக புறநோயாளிகள் பிரிவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களும் பாதிக்கப்பட்டு, அது மற்றவர்களுக்கு இரண்டாம் கட்ட பாதிப்பாக தொடர்ந்து பரவி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாயிரத்து 832ஆக இருந்தது. இன்று புதிதாக 154 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாவட்டம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாயிரத்து 986ஆக உயர்ந்துள்ளது.

நேற்று வரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஐந்தாயிரத்து 806 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், சிகிச்சைப் பலனின்றி 89 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை மற்றும் ஜம்மு-காஷ்மீரில் இருந்து வந்த தலா ஒருவர், புறநோயாளிகள் பிரிவில் இருந்த 64 பேர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 56 பேர், இரண்டாம் நிலை நோய்த்தொற்றுடைய 12 பேர், முன் களப்பணியாளர்கள் முன்று பேர், பிற மாவட்டங்களில் இருந்து அனுப்பப்பட்ட 17 பேர் உள்ளிட்ட 154 பேருக்கு இன்று கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக புறநோயாளிகள் பிரிவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களும் பாதிக்கப்பட்டு, அது மற்றவர்களுக்கு இரண்டாம் கட்ட பாதிப்பாக தொடர்ந்து பரவி வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.