ETV Bharat / state

பார்வையிழந்த மாணவிகளுக்கு கண் கண்ணாடி! - tamilnadu lions club

திருவண்ணாமலை: அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் லயன்ஸ் கிளப் சார்பில் மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கும் விழா நடைபெற்றது.

minister sevur ramachandran
author img

By

Published : Aug 17, 2019, 11:55 PM IST

தமிழ்நாட்டில் லயன்ஸ் சங்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கண் பார்வையிழந்த மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தப் பள்ளியில் பயிலும் 3,500 மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு சுமார் 300 மாணவிகளுக்கு கண்ணாடிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கினார்.

தமிழ்நாட்டில் லயன்ஸ் சங்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கண் பார்வையிழந்த மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தப் பள்ளியில் பயிலும் 3,500 மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு சுமார் 300 மாணவிகளுக்கு கண்ணாடிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கினார்.

Intro:திருவண்ணாமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் லயன்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற கண் கண்ணாடி வழங்கும் விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கலந்து கொண்டு கண் கண்ணாடிகளை மாணவிகளுக்கு அணிவித்தார்.


Body:திருவண்ணாமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் லயன்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற கண் கண்ணாடி வழங்கும் விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கலந்து கொண்டு கண் கண்ணாடிகளை மாணவிகளுக்கு அணிவித்தார்.

திருவண்ணாமலை லயன்ஸ் சங்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த நிகழ்வுகளின் ஒரு பகுதியாக திருவண்ணாமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் கண்பார்வையை சீராக்கும் நோக்கத்தோடு கண் கண்ணாடிகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கு பெற்று மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளை அணிவித்தார்.

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்திப்பார், அப்போது காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் குறித்த கேள்விகளை கேட்கலாம் என்ற எண்ணத்துடன் செய்தியாளர்கள் காத்திருந்தனர். ஆனால் செய்தியாளர்களை சந்திக்காமல் செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணித்துவிட்டு சென்றார்.

திருவண்ணாமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள 3500 மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு சுமார் 300 மாணவிகளுக்கு கண்ணாடிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை இயக்கத்தின் விழிப்புணர்வு பதாகைகளை உயர்த்திப் பிடித்து, நீரை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

அனைவருக்கும் கண்ணொளி வழங்க வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு லயன்ஸ் சங்கம் மற்றும் திருவண்ணாமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி கண்ணொளி வழங்குவதோடு மட்டும் நின்றுவிடாமல் பலரின் அறிவுக் கண்களைத் திறக்கும் என்றால் அது மிகையாகாது.



Conclusion:திருவண்ணாமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் லயன்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற கண் கண்ணாடி வழங்கும் விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கலந்து கொண்டு கண் கண்ணாடிகளை மாணவிகளுக்கு அணிவித்தார்.

அனைவருக்கும் கண்ணொளி வழங்க வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு லயன்ஸ் சங்கம் மற்றும் திருவண்ணாமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி கண்ணொளி வழங்குவதோடு மட்டும் நின்றுவிடாமல் பலரின் அறிவுக் கண்களைத் திறக்கும் என்றால் அது மிகையாகாது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.