திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அமைந்துள்ள சிகரம் சர்வேதச பள்ளியின் மூன்றாம் ஆண்டு விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு அந்த பள்ளியின் தாளாளர் வணங்காமுடி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற சாந்த முத்துவேல் கலந்து கொண்டார்.
மூன்றாமாண்டு விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவியர் அனைவருக்கும் ஓட்டப் பந்தயம், சிலம்பம், கபாடி, யோகா, கராத்தே போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மாணவர்கள் கலந்துகொண்டு அவரவர் திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர், இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதனையடுத்து மாணவர்கள் மத்தியில் பேசிய சாந்த முத்துவேல், மாணவர்களுக்கு விளையாட்டின் அவசியம் குறித்தும், வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கினார். இதில், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ‘சின்னமனூர் முதல் சிகாகோ’ வரை மோடியைப் பற்றி பேசினேன்: எம்.பி. ரவீந்திரநாத் குமார்!