திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குப் பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை தரிசனம் செய்துவருகின்றனர். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை பிரதோஷ வழிபாடு நடைபெற்றுவருகிறது.
அதன்படி, வரும் 11ஆம் தேதி அமாவாசையையொட்டி, நேற்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு பிரதோஷ சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது.
அதையொட்டி நந்திபகவானுக்கு அரிசிமாவு, மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், தயிர், விபூதி, இளநீர், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்திபகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதையும் படிங்க: தைப்பெருந்திருவிழா: ஸ்ரீமன் நாராயண வைகுண்டர் சுவாமி தேரோட்டம் நிகழ்ச்சி