ETV Bharat / state

ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த நபர்: கைதுசெய்யக் கோரி காவல் நிலையம் முற்றுகை

author img

By

Published : Feb 2, 2021, 1:50 PM IST

திருவண்ணாமலை: ஆரணியில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த நபரை கைதுசெய்யக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

காவல் நிலையம் முற்றுகை
காவல் நிலையம் முற்றுகை

திருவண்ணாமலை மாவட்டம் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவரது மகன் அன்பு வேலன் (45). இவர் அப்பகுதியில் 10 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்திவருகிறார்.

இவரிடம் 300-க்கும் மேற்பட்ட நபர்கள் ஏலச்சீட்டு பணம் கொடுத்து வந்தனர். கடந்த 6 மாதங்களாக அன்பு வேலன் பணம் கொடுத்தவர்களை ஏமாற்றிவந்தார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரணி நகர காவல் நிலையத்தை இன்று (பிப்.2) முற்றுகையிட்டனர்.

மேலும் தங்களிடம் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாகவும் அன்பு வேலன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் புகார் மனு அளித்தனர்.

இதையும் படிங்க: முதலமைச்சரைத் தெரியும் எனக்கூறி ரூ. 33 லட்சம் மோசடி

திருவண்ணாமலை மாவட்டம் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவரது மகன் அன்பு வேலன் (45). இவர் அப்பகுதியில் 10 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்திவருகிறார்.

இவரிடம் 300-க்கும் மேற்பட்ட நபர்கள் ஏலச்சீட்டு பணம் கொடுத்து வந்தனர். கடந்த 6 மாதங்களாக அன்பு வேலன் பணம் கொடுத்தவர்களை ஏமாற்றிவந்தார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரணி நகர காவல் நிலையத்தை இன்று (பிப்.2) முற்றுகையிட்டனர்.

மேலும் தங்களிடம் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாகவும் அன்பு வேலன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் புகார் மனு அளித்தனர்.

இதையும் படிங்க: முதலமைச்சரைத் தெரியும் எனக்கூறி ரூ. 33 லட்சம் மோசடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.