ETV Bharat / state

ஓய்வுபெற்ற ஆசிரியை கொலை வழக்கில் நால்வர் கைது...

author img

By

Published : Nov 13, 2019, 10:48 AM IST

திருவண்ணாமலை: ஓய்வுபெற்ற ஆசிரியை கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நான்கு பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள முனியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்துமேரி. ஓய்வு பெற்ற ஆசிரியை இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் இவர் கடந்த 5ஆம் தேதி இரவு அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அதோடு காவலுக்காக இருந்த நாயும் கொலை செய்யப்பட்டு கிடந்தது.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பணம், நகையை கொள்ளையடிக்க கொள்ளையர்கள் லூர்துமேரியை கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்ரவர்த்தி உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையிலான தனிப்படையினர் கொலைகாரர்களை தேடிவந்தனர். இதில் லூர்துமேரிக்கு சொந்தமான கடையில் கோழிகறி வியாபாரம் செய்துவந்த கருங்காலி குப்பம் சந்தைமேடு பகுதியைச் சேர்ந்த இலியாஸிடம்(30), தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த காவல் துறையினர், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்ததில் உண்மை வெளிவந்தது.

இது குறித்து இலியாஸ் கூறியதாக காவல் துறையினர் தெரிவித்தது,''இலியாஸ், அவரது அண்ணன் வாலாஜா கல்மேல்குப்பம் கிராமத்தை சேர்ந்த மூசா (40), பாத்திர வியாபாரி யூசுப் (36), ராணிப்பேட்டையை சேர்ந்த விஜயகுமார் (35) ஆகியோர் கடந்த 5ஆம் தேதி லூர்து மேரி வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர் தனியாக இருப்பதை அறிந்த கும்பல் வீட்டிற்குள்ளே நுழைய முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வெளியில் வந்த லூர்துமேரி, இலியாஸை பார்த்து இந்த நேரத்தில் இங்கே எங்கு வந்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு இலியாஸ் நாய்க்கு சிக்கன் கொடுக்க வந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இலியாஸ் கொண்டு வந்த சிக்கன் துண்டுகளை வாங்கி நாய்க்கு லூர்துமேரி போட்டுள்ளார்.

அப்போது பின்புறமாக வந்த இலியாஸ் கூட்டாளிகள் இரும்பு கம்பி மூலம் ஆசிரியையை தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து இறந்துள்ளார். அதேபோல் நாயையும் கம்பியால் அடித்துக் கொன்றுள்ளனர். பின்பு லூர்து மேரி உடலை வீட்டிற்குள்ளே தூக்கிச் சென்று சமையலறையில் அமர்ந்த நிலையில் கிடத்தி, அவர் அணிந்திருந்த சேலையின் ஒருமுனையை சிலிண்டரிலும், மறுமுனையை வீட்டிற்கு வெளியிலும் வைத்து தீவைத்துள்ளனர்.

பின்னர் வீட்டிலிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக கொள்ளையர்கள் வைத்த தீ பாதியிலேயே அணைந்ததால் சிலிண்டர் வெடிக்கவில்லை'' எனத் தெரிவித்தாக காவல் துறையினர் கூறினார். இதை தொடர்ந்து நான்குபேரையும் ஆரணி நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதையும் படிங்க:பல ஆண்களுடன் தொடர்பு: தூத்துக்குடியில் பெண் எரித்துக் கொலை

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள முனியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்துமேரி. ஓய்வு பெற்ற ஆசிரியை இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் இவர் கடந்த 5ஆம் தேதி இரவு அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அதோடு காவலுக்காக இருந்த நாயும் கொலை செய்யப்பட்டு கிடந்தது.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பணம், நகையை கொள்ளையடிக்க கொள்ளையர்கள் லூர்துமேரியை கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்ரவர்த்தி உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையிலான தனிப்படையினர் கொலைகாரர்களை தேடிவந்தனர். இதில் லூர்துமேரிக்கு சொந்தமான கடையில் கோழிகறி வியாபாரம் செய்துவந்த கருங்காலி குப்பம் சந்தைமேடு பகுதியைச் சேர்ந்த இலியாஸிடம்(30), தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த காவல் துறையினர், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்ததில் உண்மை வெளிவந்தது.

இது குறித்து இலியாஸ் கூறியதாக காவல் துறையினர் தெரிவித்தது,''இலியாஸ், அவரது அண்ணன் வாலாஜா கல்மேல்குப்பம் கிராமத்தை சேர்ந்த மூசா (40), பாத்திர வியாபாரி யூசுப் (36), ராணிப்பேட்டையை சேர்ந்த விஜயகுமார் (35) ஆகியோர் கடந்த 5ஆம் தேதி லூர்து மேரி வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர் தனியாக இருப்பதை அறிந்த கும்பல் வீட்டிற்குள்ளே நுழைய முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வெளியில் வந்த லூர்துமேரி, இலியாஸை பார்த்து இந்த நேரத்தில் இங்கே எங்கு வந்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு இலியாஸ் நாய்க்கு சிக்கன் கொடுக்க வந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இலியாஸ் கொண்டு வந்த சிக்கன் துண்டுகளை வாங்கி நாய்க்கு லூர்துமேரி போட்டுள்ளார்.

அப்போது பின்புறமாக வந்த இலியாஸ் கூட்டாளிகள் இரும்பு கம்பி மூலம் ஆசிரியையை தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து இறந்துள்ளார். அதேபோல் நாயையும் கம்பியால் அடித்துக் கொன்றுள்ளனர். பின்பு லூர்து மேரி உடலை வீட்டிற்குள்ளே தூக்கிச் சென்று சமையலறையில் அமர்ந்த நிலையில் கிடத்தி, அவர் அணிந்திருந்த சேலையின் ஒருமுனையை சிலிண்டரிலும், மறுமுனையை வீட்டிற்கு வெளியிலும் வைத்து தீவைத்துள்ளனர்.

பின்னர் வீட்டிலிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக கொள்ளையர்கள் வைத்த தீ பாதியிலேயே அணைந்ததால் சிலிண்டர் வெடிக்கவில்லை'' எனத் தெரிவித்தாக காவல் துறையினர் கூறினார். இதை தொடர்ந்து நான்குபேரையும் ஆரணி நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதையும் படிங்க:பல ஆண்களுடன் தொடர்பு: தூத்துக்குடியில் பெண் எரித்துக் கொலை

Intro:ஓய்வு பெற்ற ஆசிரியையை கொலைசெய்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.

Body:ஓய்வு பெற்ற ஆசிரியையை கொலைசெய்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.


கண்ணமங்கலம் அருகே உள்ள முனியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் லூர்துமேரி, ஓய்வு பெற்ற ஆசிரியை. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 5–ந் தேதி இரவு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் நாற்காலியில் உட்கார்ந்த நிலையில் பிணமாக கிடந்தார். வீட்டின் முன்பு அவரது நாயும் கொலை செய்யப்பட்டு கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில், குணசேகரன், இன்ஸ்பெக்டர்கள் சாலமன்ராஜா, ஜெயபிரகாஷ், விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இதில் லூர்துமேரிக்கு சொந்தமான கடையில் சிக்கன் கடை வைத்திருந்த கருங்காலி குப்பம் சந்தைமேடு பகுதியை சேர்ந்த இலியாஸிடம் (வயது 30) தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
அதில் இலியாஸ், அவரது அண்ணன் வாலாஜா கல்மேல்குப்பம் கிராமத்தை சேர்ந்த மூசா (40), பாத்திர வியாபாரி யூசுப் (36), ராணிப்பேட்டையை சேர்ந்த விஜயகுமார் (35) ஆகியோர் சேர்ந்து லூர்துமேரியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, லூர்துமேரி தினமும் விதவிதமான நகைகள் அணிந்து வருவதை கண்டு ஆசைப்பட்டு அவரிடம் நிறைய பணம், நகைகள் இருக்கும் என நினைத்து, கொள்ளையடிக்க திட்டமிட்டு கொலை செய்து உள்ளது தெரியவந்தது. மேலும் கடந்த 5–ந் தேதி இரவு இலியாஸ், லூர்துமேரியின் வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது லூர்துமேரி ஏன் இந்த நேரத்தில் வந்துள்ளாய் என கேட்டுள்ளார். அதற்கு இலியாஸ் நீங்கள் வளர்க்கும் நாய்க்கு சிக்கன் கொண்டு வந்தேன் என்று கூறியுள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்து உள்ளனர்.
அப்போது பின்புறமாக தலையில் இரும்பு ராடு மூலம் மற்ற 3 பேரும் சேர்ந்து தாக்கியதில் சம்பவ இடத்திலேயே லூர்துமேரி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவர்கள், லூர்துமேரியை தூக்கிச் சென்று அறையில் அமர்ந்தபடி வைத்துவிட்டு, கியாஸ் சிலிண்டரை திறந்துவிட்டு அதில் ஒரு சேலையை கட்டியுள்ளனர். வீட்டிற்கு வெளியே சேலையின் ஒரு பகுதியை கொண்டு வந்து அதில் தீ வைத்துவிட்டு வந்துள்ளனர். ஆனால் பாதியிலேயே தீ அணைந்ததால் சிலிண்டர் வெடிக்கவில்லை என்பது தெரியவந்தது.
மேற்கண்ட தகவலை அவர்கள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளனர்.
அதைத் தொடர்ந்து போலீசார் லூர்துமேரியிடம் இருந்து கொள்ளையடித்த கவரிங் நகைகள், தங்க கம்மல் ஒரு ஜோடி, டி.வி.டி. பிளேயர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் ஆரணி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Conclusion:ஓய்வு பெற்ற ஆசிரியையை கொலைசெய்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.