முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் செய்யார், வெம்பாக்கம், போளூர் ஆகிய வட்டங்களில் மனு அளித்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் 10,600 பயனாளிகளுக்கு ரூ24.87கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் குறிப்பாக, வருவாய்த்துறை, ஊரகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூகநலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை, கூட்டுறவுத்துறை, பழங்குடியினர் நலத்துறை ஆகியவற்றின் மூலமாக இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாற்றம், மாதாந்திர உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை, பசுமை வீடுகள் திட்டம், வேளாண் உபகரணங்கள் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
![chief minister welfare assistance function in thiruvannamalai thiruvannamalai district news திருவண்ணாமலை மாவட்டச் செய்திகள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் minister sevur ramachandran](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvm-07-welfare-assistance-script-7203277_22112019225950_2211f_1574443790_787.jpg)
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று பல்வேறு துறைகளின் மூலமாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசு பெண்களின் வளர்ச்சி முன்னேற்றம் பாதுகாப்பிற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது" என்றார்.
இதையும் படிங்க:ராமதாஸூக்கு கெடு விதித்த திமுக... மீறினால் 1 கோடி ரூபாய் இழப்பீடு!