ETV Bharat / state

கார் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு!

author img

By

Published : Sep 5, 2020, 3:25 PM IST

திருவண்ணாமலை : வந்தவாசி அருகே கார் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

car-motorcycle-head-on-collision-one-killed
car-motorcycle-head-on-collision-one-killed

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த திரும்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். இவர் இன்று (செப்.05) வந்தவாசி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது வீரம்பாக்கம் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, சென்னையிலிருந்து வந்தவாசி நோக்கி அதிவேகமாக வந்த கார், இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காரை ஓட்டி வந்த பாண்டியராஜன் என்பவரைக் கைது செய்த காவல் துறையினர், அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:2019இல் 24,000 பேர் ரயில் சார்ந்த விபத்துகளில் உயிரிழப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த திரும்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். இவர் இன்று (செப்.05) வந்தவாசி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது வீரம்பாக்கம் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, சென்னையிலிருந்து வந்தவாசி நோக்கி அதிவேகமாக வந்த கார், இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காரை ஓட்டி வந்த பாண்டியராஜன் என்பவரைக் கைது செய்த காவல் துறையினர், அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:2019இல் 24,000 பேர் ரயில் சார்ந்த விபத்துகளில் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.