ETV Bharat / state

மதுரை சிறைக்கைதி தப்பியோட்டம் - தேடும் பணியில் போலீஸ் தீவிரம்!

வேலூர்: மத்திய சிறையில் இருந்து கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம், சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தப்பி ஓடிய சிறை கைதி - தேடும் பணி தீவிரம்
author img

By

Published : Jul 3, 2019, 7:54 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ரமேஷ். இவர் 2014ஆம் ஆண்டு கற்பழிப்பு வழக்கில் 12 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் இருந்து தினந்தோறும் காலையில் சிறைக்கு அருகே உள்ள தோட்டத்திற்கு பணிக்காக கைதிகளை அழைத்துச் செல்வது வழக்கம். இன்றும் வழக்கம்போல் கைதிகளை வேலைக்காக காவலர்கள் அழைத்து சென்றனர்.

இந்நிலையில், வேலை முடிந்து மதிய உணவிற்காக மீண்டும் சிறைக்கு அழைத்து வரும்போது ரமேஷ் திடீரென தப்பியோடியுள்ளார். காவலர்கள் அவரை துரத்தி பிடிக்க முயன்றனர் இருப்பினும் அவர் தப்பிவிட்டார். இதுகுறித்து, சிறைத்துறை அலுவலர்கள் தனிப்படை அமைத்து தப்பியோடிய கைதி ரமேஷை பிடிப்பதற்காக பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தப்பி ஓடிய சிறை கைதி - தேடும் பணி தீவிரம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ரமேஷ். இவர் 2014ஆம் ஆண்டு கற்பழிப்பு வழக்கில் 12 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் இருந்து தினந்தோறும் காலையில் சிறைக்கு அருகே உள்ள தோட்டத்திற்கு பணிக்காக கைதிகளை அழைத்துச் செல்வது வழக்கம். இன்றும் வழக்கம்போல் கைதிகளை வேலைக்காக காவலர்கள் அழைத்து சென்றனர்.

இந்நிலையில், வேலை முடிந்து மதிய உணவிற்காக மீண்டும் சிறைக்கு அழைத்து வரும்போது ரமேஷ் திடீரென தப்பியோடியுள்ளார். காவலர்கள் அவரை துரத்தி பிடிக்க முயன்றனர் இருப்பினும் அவர் தப்பிவிட்டார். இதுகுறித்து, சிறைத்துறை அலுவலர்கள் தனிப்படை அமைத்து தப்பியோடிய கைதி ரமேஷை பிடிப்பதற்காக பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தப்பி ஓடிய சிறை கைதி - தேடும் பணி தீவிரம்
Intro:வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்த கைதி தப்பி ஓட்டம்
Body:திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ரமேஷ் கடந்த 2014ஆம் ஆண்டு பெண்ணை கற்பழித்த வழக்கில் 12 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார் இந்நிலையில் வேலூர் மத்திய சிறையில் இருந்து தினந்தோறும் காலையில் சிறைக்கு அருகே உள்ள தோட்டத்திற்கு பணிக்காக கைதிகளை அழைத்துச் செல்வது வழக்கம் இன்று வழக்கம்போல் கைதிகளை வேலைக்காக காவலர்கள் அழைத்து சென்றனர் வேலை முடிந்த பிறகு மதிய உணவிற்காக மீண்டும் சிறைக்கு அழைத்து வருவது வழக்கம் அவ்வாறு அழைத்து வரும்போது ரமேஷ் திடீரென்று தப்பியோடியுள்ளார் இதை அறிந்த காவலர்கள் அவரை துரத்தி பிடிக்க முயன்றபோது அவர் தப்பி ஓடியதாக தெரிவித்தனர் மேலும் இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் தப்பி ஓடிய கைதி ரமேஷை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இச்சம்பவம் வேலூர் மத்திய சிறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.