ETV Bharat / state

பதினோராம் வகுப்பு மாணவி கருகலைப்பு: போக்சோ சட்டத்தில் இருவர் கைது!

திருவண்ணாமலை: பதினோராம் மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கருக்கலைப்பு செய்த இரண்டு பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்

author img

By

Published : Jun 18, 2021, 8:18 PM IST

போக்சோ சட்டத்தில் இருவர் கைது
போக்சோ சட்டத்தில் இருவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது மாணவி இவர் அங்குள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி பதினோராம் படித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (27). இவர் மாணவியிடம் நண்பராகப் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு மகேந்திரன், மாணவியை தனியாக சந்திக்க வரும்படி கூறியுள்ளார். மகேந்திரனின் ஆசைவார்த்தை நம்பி சென்ற மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினாள்.

இது குறித்து மகேந்திரன், அதேபகுதியில் வசிக்கும் தனது நண்பர் வெங்கடேசன் (22) என்பவரிடம் இதைப் பற்றித் தெரிவித்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட வெங்கடேசன் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால், மாணவி இரண்டு மாத கர்ப்பிணியானார். இதையறிந்த மகேந்திரன், வெங்கடேசன் ஆகிய இருவரும் சிறுமிக்கு மாத்திரைகள் வாங்கிக் கொடுத்து கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, சிறுமியிடம் அவரது பாட்டி கேட்ட போது நடந்த சம்பவத்தை கூறி சிறுமி கதறி அழுதுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி இன்று (ஜூன். 18) திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: ஆற்றில் குளிக்கச் சென்ற ஆறு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது மாணவி இவர் அங்குள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி பதினோராம் படித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (27). இவர் மாணவியிடம் நண்பராகப் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு மகேந்திரன், மாணவியை தனியாக சந்திக்க வரும்படி கூறியுள்ளார். மகேந்திரனின் ஆசைவார்த்தை நம்பி சென்ற மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினாள்.

இது குறித்து மகேந்திரன், அதேபகுதியில் வசிக்கும் தனது நண்பர் வெங்கடேசன் (22) என்பவரிடம் இதைப் பற்றித் தெரிவித்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட வெங்கடேசன் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால், மாணவி இரண்டு மாத கர்ப்பிணியானார். இதையறிந்த மகேந்திரன், வெங்கடேசன் ஆகிய இருவரும் சிறுமிக்கு மாத்திரைகள் வாங்கிக் கொடுத்து கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, சிறுமியிடம் அவரது பாட்டி கேட்ட போது நடந்த சம்பவத்தை கூறி சிறுமி கதறி அழுதுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி இன்று (ஜூன். 18) திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: ஆற்றில் குளிக்கச் சென்ற ஆறு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.